tag:blogger.com,1999:blog-61239340582733519762024-02-06T23:31:22.630-08:00சேரர் குடிUnknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6123934058273351976.post-39411560396461381862013-08-07T20:37:00.001-07:002013-12-17T18:27:41.409-08:00அரியிலூர் மழவராயர் ஜமீன் (படையாட்சி )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
அரியிலூரென்னும் பெயர் அரியிலெனவும் வழங்கும். நங்கப் புலவர்களுள் ஒருவரான
அரிசில் கிழாரென்பவருடைய ஊராகிய அரிசிலென்பது இவ்வூர் என்று சிலர்
கூறுவதுண்டு. இங்கே மிகவும் பிரசித்தமான பழைய திருமால் கோயி லொன்று
இருக்கிறது. அரிக்கு இல்லாக (இருப்பிட மாக) இத்தலம் இருத்தலால் அரியிலெனப்
பெயர் பெற்ற தென்பர்.<br />
<br />
விஷ்ணுவாலயம்<br />
<br />
இங்கே உள்ள விஷ்ணுவாலயம் பெரியது. இதன்கண் எழுந்தருளியுள்ள பிரதானமான பெரு
மாளின் திருநாமம் வேங்கடேசப் பெருமாளென் பது. கோயிலில் இளையபெருமாள்,
பிராட்டியார், ஆஞ்சனேயர் என்பவர்களோடு ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி மூலவராகவும்
உத்ஸவராகவும் எழுந் தருளியிருக்கும் சந்நிதி ஒன்றுண்டு. வனவாசத் தில்
அவர்கள் இருந்த திருக்கோலமாக அவ்விக்கிர கங்கள் அமைந்துள்ளன.<br />
<br />
கோயிலின் மகாமண்டபத்தில் தசாவதார மூர்த்திகளும் மிகவும் பெரிய
திருவுருவத்தோடு தூண்களில் எழுந்தருளி நிருக்கின்றனர். அதனால் அம்மண்டபம்
தசாவதார மண்டபமென வழங்கும். அந்த மூர்த்திகளைப்போல அவ்வளவு பெரிய மூர்த்தி
களை வேறிடங்களிற் காணுதல் அரிது. சிற்ப வேலைப்பாடுகள் மிக்க சிறப்புடையனவாக
அம் மண்டபத்தில் அமைந்திருக்கின்றன. பத்து மூர்த்திகளுள் உக்ரநரசிம்ம
மூர்த்தி மிக அதிகமாக அன்பர்களால் வழிபடப்பட்டு வருகின்றார்.<br />
<br />
கீழைப் பழுவூர்<br />
<br />
இவ்வூருக்குத் தெற்கே கீழைப் பழுவூர் என்னும் தேவாரம் பெற்ற ஒரு சிவ ஸ்தலம்
இருக்கிறது. அதில் உள்ள தலவிருட்சம் ஆல். பழு என்னும் சொல்லுக்கு ஆலென்பது
பொருள். ஆலமரத்தைத் தல விருட்சமாக உடையதாதலின் பழுவூரென்னும் பெயரும்
ஆலந்துறை என்னும் பெயரும் அதற்கு உண்டாயின. அங்கே ஒரு சிவ தீர்த்தம் உண்டு.
அத்தலத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான் திருநாமம் ஆலந்துறை யீசர்
எனத் தமிழிலும் வடமூலேசர் என வட மொழியிலும் வழங்கும். அம்பிகையின்
திருநாமம் அருந்தவநாயகியென்பது. சிவபிரானை மணந்து கொள்ளும் பொருட்டு
அம்பிகை தவஞ்செய்தமை யால் அத்திருநாமம் உண்டாயிற்றென்பது அத்தல புராண
வரலாறு. அன்றியும் பரசுராமருக்குண் டான மாதுருஹத்தி தோஷம் அத்தலத்துக்கு
வந்து தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து பூசித்ததனால் நீங்கியதென்பர்.
தீர்த்தவிசேடமுடைய தாதலின் துறையென்னும் பகுதி அத்தலப் பெயரோடு சேர்ந்
திருக்கிறது. பரசுராமருடைய திருவுருவம், வட மூலேசருடைய மூலஸ்தானத்தின்
முன்புள்ள நிலை யின் மேலேயுள்ள கல் உத்தரத்திற் சயனித்த கோலமாக அமைக்கப்
பெற்றுள்ளது. பரசுராமர் தாம் வழிபட்ட காலத்தில் மலைநாட்டு அந்தணர் களைக்
கொண்டு பூசை இயற்றச் செய்தனர். பிற்காலத்தும் மலைநாட்டந்தணர் பூசையியற்றி
வந்தனர். இது திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தேவாரத்தில்,<br />
<span style="color: red;"><br /> "மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் <br /> பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே"<br /> "அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும் <br /> பந்தமலி கின்றபழு வூரானை"</span><br />
<ul><br /></ul>
<br />
என்று கூறப்படுகின்றது. இக்காலத்தில் இவ்வழக்கம் காணப்பட வில்லை. அங்கே
உள்ள சிலாசாசனங்களால் பழுவேட்டரைய ரென்ற பட்டம் பெற்றவர்களும் சோழ அரசனுடைய
அதிகாரிகளுமாகிய சிலர் அங்கே இருந்தார்க ளென்று அறியலாம்.<br />
<br />
<span style="color: blue;"><b>சிவாலயம்</b></span><br />
<br />
அரியிலூரிலிருந்து ஒரு சிவபக்தர் தினந் தோறும் கீழைப் பழுவூர் சென்று சிவ
தரிசனம் செய்துவிட்டு வந்தபின்பே உண்பது நியமம். இவ் விரண்டு ஊர்களுக்கும்
இடையில் உள்ள மருதாற்றில் ஒரு நாள் அதிக வெள்ளம் வந்தது. பழுவூர் செல்லவந்த
அன்பர் அவ்வாற்றின் வெள் ளத்தால் தடைப்பட்டுக் கரையில் நின்று ஆராமை
மீதூரப் புலம்பிநைந்தார்; உணவு கொள்ளாதிருந் தமையாலும் ஆற்றாமையாலும்
சோர்ந்து விழுந்து நித்திரை கொண்டனர். அப்பொழுது அவருடைய கனவில்
சிவபெருமான் ஒரு முதிய அந்தணத் திருக்கோலங்கொண்டு எழுந்தருளி, "இனி நீ
தினந்தோறும் பழுவூர் வந்து அலையவேண்டாம்; அரியிலூரிலேயே ஓர் இடத்தில் ஆலயம்
அமைத்து அங்கே எம்மையும் அம்பிகையையும் பிரதிஷ்டை செய்வித்து வழிபட்டு
வருக. அங்கே நாம் சாந்நித்தியமாக இருந்து மகிழ்வோம்" என அருளிச் செய்து
மறைந்தனர். பின்பு உணர்வு வரப்பெற்ற அவ்வன்பர் சிவபெருமானது திரு வருளை
வியந்து அவர் இட்ட கட்டளைப்படியே இவ்வூரில் சிவாலயம் அமைத்தனர். பழுவூர்த்
தலத்திலுள்ள மூர்த்திகளின் திருநாமங்களே அரியி லூரிலுள்ள மூர்த்திகளுக்கும்
இடப்பட்டு வழங்கு வனவாயின.<br />
<br />
<span style="color: blue;"><b>வேறு கோயில்கள்</b></span><br />
<br />
துர்க்காதேவியின் பல பேதங்களுள் ஒரு தெய்வமாகிய ஒப்பிலாதவள் என்னும்
தேவிக்கு ஒரு கோயில் இங்கே உண்டு. அது மிகவும் பிரசித்தி பெற்றது.
அரியிலூர் ஜமீந்தார்களுக்கு அத்தேவி குலதெய்வமாயிருத்தலன்றி அவர்களுடைய படை
யாளர்களாகிய மழவர்களுக்கு வழிபடு தெய்வமாக வும் இருந்ததாகத் தெரிகிறது.<br />
<br />
குறிஞ்சான் குளம் என்னும் ஒரு தடாகத்தின் கரையில் வாயுமூலையில் அரசு நட்ட
பிள்ளையார் கோயில் என்னும் ஓராலயம் இருக்கிறது. ஒரு காலத் தில் அரியிலூர்
ஜமீந்தாரொருவர் மீது பகையரச னொருவன் படையெடுத்து வந்தான். அவனுடைய படை
அளவிற் பெரியதாக இருந்தது. இந்த ஜமீன் தாருடைய படை அதனை எதிர்க்கும்
ஆற்றலுடைய தாகத் தோற்றவில்லை. அதனால் அவர் மிகவும் வருந் தினார்.
தோல்வியுற்றால் தம்முடைய சமஸ் தானத்தை இழக்க நேரிடுமே என்ற கவலை யாயினும்
பின்வாங்காமல் எதிர்த்துப் போர் செய் வதையன்றி வேறு
வழியில்லையென்றெண்ணினார். தெய்வ பலத்தையன்றி மனித பலத்தால் தமக்கு வெற்றி
கிடைப்பது அரிது என்பதை அவர் உணர்ந் தார். ஆதலின் திருவருளே துணையெனத்
துணிந்து தம் படையுடன் சென்றார். செல்லுகை யில் அக்கோயிலிலுள்ள விநாயகரை
உள்ளம் உருகி வணங்கித் தம்மைக் காப்பாற்ற வேண்டு மென்று பிரார்த்தித்தார்.
விநாயகர் திருவருளால், வந்த பகையரசரது படை ஜமீந்தார் படைக்கு எதிர்நிற்கும்
வலியின்றிப் புறங் கொடுத்து ஓடிப் போயிற்று. ஜமீன்தார் வெற்றி பெற்றார்.
தாம் வெற்றிபெற்றதற்குக் காரணம் விநாயகர் திரு வருளே என்பதை அவர் நன்றாக
அறிந்தனர். தம் அரசை அழியாதபடி மீண்டும் நிறுவுவித்த அருளு டையவராகையால்
அம்மூர்த்திக்கு 'அரசு நட்ட பிள்ளையார்' என்ற திருநாமம் சூட்டி அவரை வழி
பட்டுப் பலவகைச் சிறப்புக்களைச் செய்தனர். அரசு நட்டானேரி என்ற ஏரி
ஒன்றையும் கோயிலுக் கருகில் வெட்டுவித்தார். இக்காலத்தும் நிமித்தம்
பார்ப்பதற்கு அக்கோயிலுக்குப் பலர் செல்லுவர்.<br />
<br />
இவ்வாலயங்களையன்றி விசுவநாதஸ்வாமி கோயில், சஞ்சீவிராயன் கோயில், காளிங்க
நர்த்த னர் கோயில் முதலிய பல கோயில்கள் உண்டு. மிக வும் தூயராகவும்
செல்வராகவும் சமஸ்தானத்து அதிகாரியாகவும் இருந்து விளங்கிய மீனாட்சி
தீட்சிதரென்பவரால் கட்டப்பெற்ற பெரிய மண்டப மொன்று மேற்கூறிய குறிஞ்சான்
குளத்தின் தென் கரையில் உள்ளது. அதற்கு மீனாட்சி மண்டப மென்பது பெயர்.
அதனுள் விநாயகர் கோயிலும் சிவ விஷ்ணு ஆலயங்களும் உண்டு. என்னுடைய
இளம்பிராயத்தில் அங்கே பூசைகள் செவ்வனே நடைபெற்று வந்ததைப்
பார்த்திருக்கிறேன்.<br />
<br />
<span style="color: blue;">ஜமீன்தார்கள்</span><br />
<br />
அரியிலூர் சமஸ்தானம் பல நூற்றாண்டு களாகச் சிறப்புற்று வந்ததாகும் இந்தச்
சமஸ் தானத்து ஜமீன்தார்கள் பலரைப்பற்றிய பழந் தமிழ்ப் பாடல்களும் வடமொழிச்
சுலோகங்களும் தெலுங்குப் பத்தியங்களும் கீர்த்தனங்களும் உண்டு. இவர்களின்
குடிப்பெயர் குன்றை <span style="color: red;">ஒப்பிலாத மழவராயர் </span>என்பது.<br />
<br />
அரியிலூருக்குக் குன்றை என்பது ஒரு பெயர். இதனைச் சூழ்ந்துள்ள நாடு குன்றவள
நாடு என் னும் பெயர் பெறும். அதுவே குன்றையென மருவி வழங்குகின்றது.
மலைத்தொடர் இங்கே ஆரம்பமா கின்றதாதலின் அப்பெயர் இந் நாட்டிற்கு உண்டா
யிற்றென்று தோற்றுகின்றது. இதனருகிலுள்ளன வாகிய பெரிய திருக்குன்றம்,
குன்றம் என்னும் ஊர்களின் பெயர்கள் இக்கருத்தை வலியுறுத்தும்.<br />
<br />
முற்கூறிய ஒப்பிலாதவளென்னும் துர்க்கை யைக் குலதெய்வமாக உடையவர்களாதலின்
'ஒப்பிலாத ' என்னும் தொடர் ' இந்த ஜமீன்தார்களின் பெயர்களோடு சேர்த்து
வழங்கப்படுகிறது.<br />
<br />
<span style="color: red;">மழவராயர்</span><br />
<br />
<span style="color: blue;">மழவராயரென்பதற்கு மழவர்களுக்குத் தலைவ ரென்பது பொருள். மழவர்களென்பவர்கள்
சிறந்த வீரர்களுக்குள் ஒரு பகுதியார்</span>. சங்க நூல்களிலும் பழைய சாசனங்களிலும்
அவர்களைப் பற்றிய செய்திகளும் அவர்களது வீரத்தின் சிறப்பும்
காணப்படுகின்றன. அதனால் அவர்கள் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்து
வரும் பழங் குடிகளென்று தெரியவருகின்றது. இப்பொழுது அவர்கள்
வன்னியவகுப்பினரைச் சார்ந்தவர்களாக இங்கே இருக்கின்றார்கள்.<br />
<br />
<span style="color: blue;"><b>மழநாடு</b></span><br />
<br />
மழவர்கள் இருந்து வாழ்ந்த காரணம் பற்றி இப் பாகத்திலுள்ள பிரதேசம் மழநாடு
என்னும் பெயர் பெற்றது. அப்பெயர் மழவர் நாடு என்ப தன் திரிபே ஆகும்.
"பெருஞ் சரண்மா மறை யோரும்" என்று காளமேகத்தாற் சிறப்பிக்கப் பெற்ற அந்தண
வகுப்பினருள் ஒரு வகையாரிற் பலர் இந்நாட்டிலிருத்தலால், அவர்கள் '<span style="color: red;">மழ
நாட்டுப் பிரகசரணத்தார்</span>' என வழங்கப் பெறுவர். பாடல் பெற்ற சிவஸ்தலமாகிய
திருமழபாடி என்ப தன் பெயர் மழவர் பாடி என்பதன் சிதைவென்பர்! மழவர்கள் பாசறை
அமைத்திருந்த இடமாதலின் அஃது அப்பெயர் பெற்றது. திருஞானசம்பந்த மூர்த்தி
நாயனார் புராணத்தில் கூறப்படும் கொல்லி மழவனென்பவன் இம்மழநாட்டின் ஒரு
பகுதியை ஆண்டவனாவன்.<br />
<br />
இம் மழநாடு மேல்மழநாடு கீழ்மழநாடு என இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது.
"மேல்மழ நாடெனும் நீர்நாடு" என்று பெரிய புராணத்திலே ஆனாயநாயனார்
புராணத்தில் மேல்மழநாடு சொல்லப்படுகிறது. அரியிலூர் சமஸ்தானம்
கீழ்மழநாட்டைச் சார்ந்தது.<br />
<br />
குன்றவளநாட்டுக்கு உரியவர்களும் ஒப்பிலாத வளென்னும் தெய்வத்தை
வழிபடுபவர்களும் மழவர் களுக்குத் தலைவர்களுமாயினமையின் இவ்வரியி லூர்
ஜமீன்தார்கள் 'குன்றை ஒப்பிலாத மழவ ராயர்' என்னும் குடிப்பெயரைப்
பெற்றார்கள்.<br />
<br />
<span style="color: blue;"><b>ஆதரவு</b></span><br />
<br />
அவர்களிற் பலர் சிவவிஷ்ணு ஆலயங்களை வேற்றுமை யின்றிப் பாதுகாத்து வந்தனர்.
பல வகை மதத்தினரும் அவர்களுடைய ஆட்சியின் கீழ்க் குறைபாடின்றி
வாழ்ந்திருந்தனர். ஸம்ஸ் கிருதம், தெலுங்கு, தமிழ், சங்கீதம் என்பவற்றிற்
சிறந்த வித்துவான்கள் பலர் ஆதரிக்கப் பெற்றார் கள்; பல ஜமீன்தார்கள்
தாங்களே தமிழ் முதலிய வற்றில் வல்லவர்களாக இருந்தார்கள். பல வித்து வான்கள்
அவர்களுடைய பெருவண்மையையும் புலவர்களை அவர்கள் போற்றும் இயல்பையும்
அறிந்து வந்து பாராட்டிப் பரிசுபெற்றுச் செல்வ துண்டு.<br />
<br />
<b><span style="color: blue;">கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயர்</span></b><br />
<br />
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அரியிலூரில் கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயரென்று
ஒரு ஜமீன்தார் இருந்தார். அவர் வித்துவான்களை ஆதரித்துப் போற்றுவதில்
தமிழ்நாடு முழுவதிலும் பெயர் பெற்றிருந்தார். சங்கீதத்தில் சிறந்த பயிற்சி
அவருக்கு உண்டு. பல சங்கீத வித்துவான் களை வருவித்து வைத்துக்கொண்டு
அவர்களுடைய ஆற்றலை அறிந்து ஏற்றவாறு பரிசு அளிப்பவர். தமக்குச் சங்கீதம்
தெரியும் என்ற தருக்கினால் வித்துவான்களை இகழ்ச்சி செய்யும் தன்மை அவர்பால்
மருந்துக்கும் இல்லை. அவருடைய புகழைப் பாடுவதில் புலவர்களுக்கு ஓர் ஊக்கம்
இருந்தது.<br />
<br />
<b><span style="color: blue;">அந்தகக்கவி வீரராகவ முதலியார்</span></b><br />
<br />
இந்நாட்டிலுள்ள பல ஜமீன்தார்களிடத்தும் யாழ்ப்பாணத்தை ஆண்டுவந்த பரராச சேகர
னென்ற அரசனிடத்தும் சென்று தமது கல்வி யாற்றலைக் காட்டி மட்டற்ற புகழைப்
படைத்த அந்தகக்கவி வீரராகவ முதலியாரென்னும் புலவர் சிகாமணி ஒரு சமயம்
அரியிலூருக்கு வந்தார். நாடெல்லாம் கவிகளாலும் புகழாலும் அடிப்படுத்திய
கவிஞரை மழவராயர் உபசரித்துப் போற்றுவதற்கு என்ன தடை? அக் கவிஞருடைய கவி
வெள்ளத்தில் மூழ்கிப் பேரானந்தம் அடைந்த மழவராயர் கணக் கற்ற பரிசில்களை
அவருக்கு வழங்கினார்; தக்க விடுதியொன்றில் இருக்கச்செய்து வேண்டிய
சௌகரியங்களை யெல்லாம் அமைத்துக் கொடுத்து அவருக்கு ராஜோபசாரம்
செய்வித்தார்.<br />
<br />
தம்பால் வந்த வித்துவான்கள் பலருக்கு அவர் குறிப்பிட்ட ஒரு வேளையில்
அன்றன்று படியளந்து வருவார். தம்மைக் காணவந்தவர்களை அலைக் கழியாமல் உடனுடன்
வேண்டியவற்றை விசாரித்து அவர்கள் குறையை நீக்கி அனுப்புவார். அவர்
படியளக்கும் சிறப்பை அறிந்த அந்தகக்கவி வீர ராகவ முதலியார் அச்செயலைப்
பாராட்டி,<br />
<ul><br />
(கட்டளைக் கலித்துறை)<span style="color: red;"><br />
*" சேயசென் குன்றை வருமொப்பி லாதிக்குச் செங்கமலத்<br />
தூய செங்கண்ண னிணையொப்ப னோதண் டுழாயணிந்த<br />
மாய னளக்கும் படிமூன்று க்ருஷ்ணைய மாமழவ<br />
ராய னளக்கும் படியொருநாளைக் கிலக்கமுண்டே"</span></ul>
<br />
என்ற பாடலைப் பாடினர்.<br />
------- <br />
*இதன் பொருள்:- செம்மையாகிய குன்றை நகரில் உள்ள ஒப்பிலாத மழவராயருக்குச்
செந்தாமரைக் கண்ணையுடைய திருமால் ஒப்பாவானோ? திருத்துழாயை அணிந்த அந்த
மாயன் அளக்கும் படி (உலகம்) மூன்றே; இந்த கிருஷ்ணைய மழவ ராயர் அளக்கும்
படியோ ஒரு நாளைக்கு லக்ஷம் உண்டு. படி - உலகம், தான்யப்படி.<br />
<br />
<b><span style="color: blue;">குமார ஒப்பிலாத மழவராயர்</span></b><br />
<br />
கிருஷ்ணைய ஒப்பிலாத மழவராயருக்கு ஒரு குமாரர் இருந்தார். அவர் பெயர் குமார
ஒப்பிலாத மழவராயர் என்று வழங்கி வந்தது. அவரும் சங்கீ தத்தில் மிக்க
பயிற்சியை உடையவராக இருந் தனர். தம் தந்தையாருடைய சபைக்கு வரும் சங்கீத
வித்துவான்களுடைய இசையைக் காதாரக் கேட்டுக் கேட்டு அனுபவித்ததனாலேயே
தமக்குச் சங்கீத ஞானம் உண்டாயிற்றென்பது அவர் நம்பிக்கை. ஆதலின்
வித்துவான்களிடத்தில் அவருக்கிருந்த பக்தி அளவற்றதாக இருந்தது.<br />
<br />
ஒரு நாள் மாலை நேரம்; வெண்ணிலவு பால் போலக் காய்ந்தது; தென்றல் வீசியது; இள
வேனிற் காலம். மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் கலந்த
அந்தக் குளிர்ந்த பொழுதில் குமார மழவராயர் "ஈசன் எந்தை இணையடி நீழலை"
நினைந்து ஆனந்தமாகப் பாடிக் கொண்டு இருந்தார்.<br />
<br />
அந்தகக்கவி வீரராகவர் குமார மழவராயரை அச்சமயத்திற் பார்க்க வந்தார்; அடையா
நெடுங் கதவையுடைய அரண்மனையில் தடையின்றிப் புகுந் தார். குமார மழவராயர்
மேல் மாடத்தில் பாடிக் கொண்டு மகிழ்ந்திருத்தலை யறிந்தார். "ஒருவரும் என்
வரவை அறிவிக்க வேண்டாம்" என்று சொல்லி விட்டு மெல்ல மேலே சென்று மறைவி
லிருந்து அவருடைய கானத்தைக் கேட்டு அனுப வித்துக் கொண்டிருந்தார்.<br />
<br />
இசைப்பாட்டு நின்றது. கவிஞர் பெருமான் அம் மழவராயரிடம் வந்தார்.
வருகையிலேயே அவர் உள்ளத்தேழுந்த பேரானந்தம் பின்வரும் பாடலாக
வெளிப்பட்டது.<br />
<ul><br />
(கட்டளைக் கலித்துறை)<span style="color: red;"><br />
*"வாழொப்பி லாதவன் சேயொப்பி லாத மழவதிரை<br />
ஆழிக் கடல்விட்டு நீபாடுங் காலத் தரிசெலுங்கால்<br />
நீழர் கவுத்துவ நீத்துச்செல் வானந்த நீண்மணிதான்<br />
காழொப் பினுநின் னிசைகேட்குங் காற்கரைந்த்தேகுமென்றே."</span></ul>
<br />
---------<br />
* இதன் பொருள்:- கிருஷ்ணய ஒப்பிலாத மழவராய ருடைய குமாரனாகிய ஒப்பிலாத
மழவராய, நீ பாடுங் காலத்தில் தம்முடைய பாற்கடலை விட்டுவிட்டுத் திருமால்
வரும்போது தம் மார்பிலுள்ள ஒளியையுடைய கௌஸ்துபமணியானது வயிரமுடையதாக
இருந்தாலும் உன்னுடைய சங்கீதத்தைக் கேட்டால் கரைந்து விடுமென்று கருதி
அதனை எடுத்து வைத்துவிட்டு வருவார்.<br />
<br />
"என்ன! நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்? முன்னமே தெரிவிக்கக் கூடாதா?" என்றார் குமார மழவராயர். <br />
<br />
<span style="color: blue;"><b>கவிஞர்</b></span>: உங்களுடைய இசை யமுதத்தைப் பருகுவதற்குச் சமயம் நேர்ந்த பொழுது
அதனைக் கைவிடக் கூடாதென்று எண்ணி மறைந்திருந் தேன். குற்றமாயின் பொறுக்க
வேண்டும்.<br />
<br />
<span style="color: blue;"><b>குமார</b></span>: - குற்றமா! தங்களுக்கு ஆதனங் கொடுத்து இருத்தி மரியாதை செய்யாமல் இருந்த என் பிழையைத் தாங்களல்லவா பொறுக்க வேண் டும்?<br />
<br />
<span style="color: blue;"><b>கவிஞர்</b></span>, "இந்தச் செய்யுளைக் கேட்டருள வேண்டும்" என்று 'வாழொப்பிலாத' என்ற செய்யுளைச் சொன்னார்.<br />
<br />
சந்கீதத்தினால் கல் உருகுமேன்பது மிகவும் அறிய செய்தி. அகத்தியரும்
இராவணனுக்கும் ஒரு முறை விவாதம் நேர்ந்த பொழுது அகத்தியர் வீணை இசையால்
பொதியில் மலையைக் குழையச் செய்தனர்; இராவணன் அங்ஙனம் செய்ய இயலாமையின்
தோல்வியுற்ரு இலங்கைக்குப் போய் விட்டான். இச்செய்தியை, 'இராவணனைக் கந்தரு
வத்தாற் பிணித்து' என்ற தொல்காப்பியப் பாயிர உரையில் வரும் தொடராலும்,
தஞ்சை வாணன் கோவையாலும் பிறவற்றாலும் அறியலாம். கல் இசைக்கு உருகும் என்பதை
நினைந்து, 'கௌஸ் துபமணி நின்னுடைய இசைக்கு உருகிவிடும்' என்று திருமால்
எண்ணினாரெனக் கற்பித்த பகுதி கவிஞருடைய அரிய நூலுணர்வைக் காட்டுகிறது.<br />
<br />
பாட்டைக் கேட்ட மழவராயர் அளவற்ற மகிழ்ச்சி கொண்டார்; "இந்தப் பாட்டு எல்லா
விதத்திலும் சிறப்புடையது. ஆயினும் என்னைப் பற்றி இருப்பது தான் ஒரு குறை"
என்று தம் முடைய பணிவைப் புலப்படுத்தினார்; பரிசில் பல வழங்கினார்.<br />
<br />
<span style="color: blue;"><b>பக்கிரிக்கு யானை கொடுத்தவர்</b></span><br />
<br />
வடநாட்டில் நவாப் ஒருவர் ஆண்டு வந்தார். துறவு பூண்ட பக்கிரி ஒருவர்
அவரிடம் இருந்தார். அவருக்கு நவாப் யானையொன்று கொடுத்திருந் தனர். அதன்மேல்
அவர் சில சமயம் ஏறி வருவ துண்டு. ஒரு சமயம் அந்தப் பக்கிரியை நவாப்
அவமதித்து, யானையையும் கைப்பற்றிக் கொண் டார். அது பொறாத பக்கிரி,"நான்
உன்னை விட்டு நீங்கி விடுகிறேன்" என்றார்.<br />
<br />
<span style="color: blue;"><b>நவாப்</b></span>- இந்த இடத்தை விட்டால் உமக்கு வேறு போக்கிடம் ஏது? உம்மை யார்
மதிப்பார் கள்? என்னுடைய தயையினாலல்லவோ நீர் இங்கே இருந்து வந்தீர்?<br />
<br />
<span style="color: blue;"><b>பக்கிரி</b></span>:- உம்மை எண்ணித்தானா என்னை ஆண்டவர் படைத்தார்? உலக முழுவதும்
எனக்கு உதவி செய்யும். நம்முடைய பாஷையே தெரியாத இடங்களிலும் நான் போய்
யானைப் பரிசும் நன்மதிப்பும் பெறுவேன். அல்லாவின் அருள் இருக் கும் பொழுது
எனக்கு என்ன குறை?<br />
<br />
<span style="color: blue;"><b>நவாப்</b></span>:- இந்தப் பயமுறுத்தலெல்லாம் இங்கே வேண்டாம். காரியத்தில் உம்முடைய அல்லாவின் அருளைக் காட்டும்; போம்.<br />
<br />
<span style="color: blue;"><b>பக்கிரி</b></span>,"பேதையே, பார்; தென்னாட்டுக்குப் போய் யானையை வாங்கி வந்து இன்னும்
சில நாட் களுள் உன்னிடம் காட்டுகிறேன்" என்று சபதஞ் செய்து புறப்பட்டார்.
'துறவிக்கு வேந்தன் துரும்பு' அல்லவா?<br />
<br />
பக்கிரி பல பாஷைகளிற் பயிற்சி பெற்றவர். அவர் பல அரசர்களிடமும் பல
ஜமீன்தார்களிட மும் சென்று தமக்கு யானை வேண்டுமென்று கேட் டார். "யாரும்
இவருக்கு யானை கொடுக்கக் கூடாது" என்று நவாப் உத்தரவு அனுப்பியிருந்
தமையால் அவர்களெல்லாம் பயந்து பக்கிரியிடம் தாம் கொடுக்க முடியாத
காரணத்தைக் கூறி வருந்தி மறுத்து விட்டார்கள்.<br />
<br />
நாடெல்லாம் சுற்றிவந்த பக்கிரி இந்த அரியி லூர் வந்து சேர்ந்தார்.
அப்பொழுது இங்கே இருந்த ஜமீன்தாரிடம் சென்று தமக்கு யானை ஒன்று
வேண்டுமென்று கேட்டார்; நவாபினுடைய கடுமையான செயல்களையும் எடுத்துக்
கூறினார். எந்த மதத்தினராயினும் ஞான முடையவர்களாக இருப்பவர்களை மதிக்க
வேண்டுமென்ற கொள்கை யையுடைய ஜமீன்தார் பக்கிரிக்கு வேண்டிய உப சாரங்களைச்
செய்தார்; யானையொன்றையும் வழங் கினார்; அதனைக் காப்பாற்றுவதற்கும் பிற
செலவு களுக்குமாக ஒரு தக்க பொருளை உதவி ஒரு பாகனையும் உடன் அனுப்பினார்.
பக்கிரி, "அல்லா உங்களூக்கு வெற்றியையும் புகழையும் உண்டாக்கு வார்" என்று
மனமார ஜமீன்தாரை வாழ்த்திவிட்டு யானையுடனும் பரிசில்களுடனும் நவாபுக்கு
முன் போய் நின்றார்.<br />
<br />
நவாபுக்கு ஒருபக்கம் வியப்பும் மற்றொரு பக்கம் சினமும் உண்டாயின. "நம்முடைய
உத்தரவை மீறி எந்த மனுஷன் யானை கொடுத் தான்?" என்று கர்ஜனை செய்தார்;
"பார்க்கிறேன் அவனுடைய ஆண்மையை" என்று மீசையை முறுக்கினார்; படையாளரை
அழைத்து ஆரியி லூரின்மேற் படையெடுக்க வேண்டு மென்று கட்டலையிட்டார்.<br />
<br />
நவாபின் படைகள் அரியிலூருக்கு வெளியே வந்து தங்கின. பக்கிரிக்கு யானை
கொடுத்த குற்றத்திர்காக நவாப் யுத்தம் செய்யப் படையை அனுப்பியுள்ளாரென்பதை
ஜமீன்தார் அறிந்தனர். <span style="color: red;">"அல்லா வெற்றியும் புகழும் தருவார்"</span> என்று பக்கிரி
வாழ்த்தியது அவருடைய ஞாபகத்துக்கு வந்து ஊக்கத்தை உண்டாக்கியது. தாம்
செய்தது ஒரு நல்ல காரியமென்றும், நல்ல காரியத்திற்கு இடையூறு வாராமற்
கடவுள் காப்பாரென்றும் அவர் எண்ணி, அரியிலூரிலுள்ள தம் வழிபடு கடவுளாகிய
ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயிலை அடைந்து அவரை வணங்கினார். அவருடைய உண்மை
யன்பை மெச்சிய பெருமாள் ஒருவர் மீது ஆவேச ரூபமாக வந்து, "நீ படைகளோடு
சென்று யுத்தம் செய்; வெற்றி உண்டாகும்" என்று கட்டளையிட்டார். ஜமீன்தார்
கடவுளின் கருணைத் திறத்தை எண்ணி உருகி மகிழ்ந்து போர் புரியச் சென்றனர்.
போரில் நவாபின் படை தோல்வி யடைந்து ஓடிற்று. அப்பொழுதுதான் தம் படை
பெரிதானாலும் அல்லாவின் அருள் எல்லாவற்றினும் பெரிதென்னும் எண்ணம்
நவாபுக்கு உண்டாயிற்று. பக்கிரியின் பாதங்களில் விழுந்து தாம் செய்த
குற்றத்தைப் பொறுக்கும்படி வேண்டினார்.<br />
<br />
பக்கிரிக்கு யானை வழங்கி அதனால் நிகழ்ந்த போரிலும் வெற்றியுற்றதனால்
<span style="color: red;"><b>'பக்கிரிக்கு யானை கொடுத்தவர்'</b></span> என்னும் பட்டம் ஜமீன்தாருக்கு உண்டாயிற்று.
அதுமுதல் அவர் சந்ததியாருடைய பட்டங்களில் ஒன்றாக அது வழங்கி வருகிறது. பல
செய்யுட்களிலும் கீர்த்தனங்களிலும் அந்தப் பட்டப் பெயரைக் காணலாம்.<br />
<br />
<b><span style="color: blue;">பனைமரம் பிடுங்கிய வீரன்</span></b><br />
<br />
இந்தச் சமஸ்தானத்து ஜமீன்தார்கள் பல வகையிலும் புகழ்பெற்று வருதலை அறிந்த
பிற நாட்டிலுள்ள அரசர்களும் சிற்றரசர்களும் இவர் களிடம் மிக்க பொறாமை
கொண்டார்கள். ஒரு முறை ஆந்திர தேசத்து ஜமீந்தாரொருவருடைய அதிகாரியான ஐயப்ப
நாய்க்கரென்பவர் இந்த ஜமீன்தார்மீது படையெடுத்து வந்தனர். பெரிய படையுடன்
வந்த அவர் இவ்வூருக்குத் தெற்கே ஒரு பாசறையை அமைத்து அதில் தங்கினார். உடன்
வந்த வேலையாட்களைக் கொண்டு அவ்விடத்தில் ஒரு குளம் வெட்டுவித்தார். அதனையே
ஐயப்ப நாய்க்கன் குளம் என்று இக்காலத்தில் வழங்குகிறார் கள். தம்முடைய
ஆற்றலையும் படையின் மிகுதியை யும் காட்டுவதற்கும் தம் பெயர் என்றும் வழங்கு
வதற்கும் பகையரசருடைய நாடுகளில் இங்ஙனம் செய்வது பண்டை அரசர்களுடைய
வழக்கம்.<br />
<br />
அவர் வரவையறிந்த ஜமீந்தார் தம் படை வீர்ர்களை யெல்லாம் போர்புரிய
அனுப்பினார். கடும் போர் மூண்டது. இரண்டு பக்கங்களிலும் படை வீரர்கள்
மிகுதியாக இருந்தனர். யுத்தம் நடக்கை யில் ஜமீந்தார் படையில் இருந்த ஒரு
குதிரைவீர னுக்கு மிக்க தாகம் உண்டாயிற்று. அருகில் எங் கும் நீர்நிலை
இல்லை. ஆகவே, அவன் நீரைத்தேடித் தாகம் தீர்த்துக்கொள்ள நினைந்து தன் குதிரை
யைத் திருப்பி ஒரு பக்கமாக ஓட்டினான். அக் குதிரை என்ன காரணத்தாலோ அதிக
மருட்சியை யடைந்து வேகமாக ஓட ஆரம்பித்தது; மழவவீர னுடைய கைக்கு அடங்காமல்
வாயுவேகமாக அது பறந்தது. அந்த வேகத்தால் மிக்க தாகம் அடைந்த வீரன் குதிரையை
நிறுத்த எவ்வளவோ முயன்றும் முடிய வில்லை. அவனுடைய நா உலர்ந்து விட்டது;
இளைப்பு அதிகரித்தது. குதிரையோ இன்ன திசை யில்தான் செல்வதென்றில்லாமல் கண்ட
இடங்களி லெல்லாம் ஓடிற்று;இந்த நிலையில், ஏதாவதொரு மரத்தினருகே வந்தால்
அந்த மரத்தையாவது பிடித்துக்கொண்டு குதிரையை நிறுத்தலாமென எண்ணினான் வீரன்.
வழியில் ஒரு சிறிய பனை மரத்தை நோக்கிய வீரன் அதனருகில் வந்ததும் மரத்தை
வேகமாகத் தழுவிக்கொண்டான். அது வேரற்றுக் காய்ந்து ஆடி நைந்து
போயிருந்தது; ஆதலின் அவன் கையோடு அது வந்துவிட்டது. குதிரையின் ஓட்டம்
நின்றபாடில்லை.<br />
<br />
இளைப்பு மிகுதியால் அவன், " ஐயோ அப்பா! ஐயோ அப்பா!" என்று கூவிக்கொண்டே வந்தான்; தன் கையில் இருந்த பனைமரத்தை விடவுமில்லை.<br />
<br />
குதிரை மீண்டும் யுத்த களத்தை நோக்கி வந் தது. ஐயப்ப நாய்க்கருடைய
படையினர் அந்த மழவவீரன் வருவதை நோக்கினர். தலைதெறிக்கும் வேகத்தோடு வரும்
குதிரையின்மேல் ஏறிக் கொண்டு கையில் ஒரு பனைமரத்தோடு வரும் அவ னைக்கண்டு
அவர்கள் வியப்புற்றனர். அவ்வீரன் களைப்பினால் சொல்லிய சொற்கள் அவர்கள்
காதில், 'ஐயப்பா, ஐயப்பா' , என்று விழுந்தன. தம்மு டைய தலைவனைத்
தாக்குவதற்கு அவன் வருவதாக அவர்கள் எண்ணினர். "அப்பா மரத்தைப் பிடுங் கும்
வீரனாக வல்லவா இருக்கிறான் இவன்! இவன் ஒருவனே இப்படி இருந்தால் மற்றவர்கள்
எப்படி இருப்பார்களோ! இவனுக்குப் பின்னே இன்னும் எத்தனை வீரர்கள் என்ன என்ன
ஆயுதங்களுடன் வருவார்களோ! மரத்தைப் பிடுங்கிப் போர் புரிவ தைப்
புராணங்களிற் கேட்டிருக்கிறோம்; நேரில் பார்த்ததில்லை. இனிமேல் இவனிடம்
நம்முடைய ஜபம் பலிக்காது" என்று எண்ணிச் சிலர் பயந்து ஓட ஆரம்பித்தனர்.
அவர்களைக் கண்டு ஐயப்ப நாய்க்கரும் எஞ்சிய படை வீரர்களும் அச்சம் கொண்டு
ஓடிப் போயினர். பின்பு குதிரை காலோய்ந்து நன்றது.<br />
<br />
அந்தக் குதிரையின் செயலை நினைக்கும் பொழுது, "உருவக் குதிரை மழவர்" என்ற அகநா னூற்றுச் செய்யுளின் அடி ஞாபகத்திற்கு வரு கின்றது.<br />
<br />
<span style="color: blue;"><b>
வித்துவான்கள்</b></span><br />
<br />
அரியலூர் சமஸ்தானத்தில் வடமொழி, தென் மொழி, தெலுங்கு என்னும் மூன்றிலும்
வல்ல பல வித்துவான்களும் சங்கீத வித்துவான்களும் பரத சாஸ்திரத்தில்
தேர்ச்சி பெற்றவர்களும் ஜமீன்தார் களுடைய ஆதரவு பெற்று வாழ்ந்து
வந்தார்கள். புலவர்களுடைய பெருமையை அறிந்து அவர்கள் மனத்தில் திருப்தியை
உண்டாக்குதலையே பெரும் பயனாக எண்ணி ஜமீன்தார்கள் வேண்டிய உத வியை அளித்து
வந்தனர். பல ஜாதியினராகிய வித்துவான்கள் தங்கள் தங்களுக்கு உதவிய ஜமீன்
தார்களைப் பாராட்டி அவ்வப்போது பாடிய பாடல் களும் பிரபந்தங்களும் பலவாகும்;
வேறு வகை நூல்களும் உண்டு.<br />
<br />
தமிழ், வடமொழி, சங்கீதம் முதலியன நம்ம டைய நாட்டில் ஒழுங்காக
வளர்ச்சியுற்று வந்த தற்கு முக்கிய காரணம் மடாதிபதிகளும் அரசர்க ளும்
ஜமீன்தார்களும் பிரபுக்களும் வித்துவான் களை ஆதரித்துப் ப்பாதுகாத்து
வந்தமையே. செல் வம் பெற்றதனால் பயன், புலவர் பாடும் புகழை யடைதலென்பதே
அவர்களுடைய முக்கிய கொள் கையாக இருந்தது. கோப்பெருஞ்சோழனோடு உயிர் நீத்த
பிசிராந்தையாரைப்போலவே பிற் காலத்துச் சீனக்கனென்னும் பிரபுவோடு பொய்யா
மொழிப் புலவர் ஈமம் புக்கனர். அரசியல் விஷயங்களிலும் உயர்ந்த தலைமையை
அளித்துக் கபிலரை வழிபட்டு வந்த பாரியைப்போல ஒட்டக்கூத்தரை வழிபட்ட
குலோத்துங்கனும் இருந்தான். இங்ங னம் வழிவழி வந்த புலமையும் வண்மையும்
தமிழ் நாட்டில் அறிவென்னும் விளக்கை அவியாமல் இருக்கச் செய்தன.
சமஸ்தானங்கள் முதலியவை கலைகளை வளர்த்தற்குரிய இடங்களாக இருந்தன.<br />
<br />
<span style="color: red;">அரியலூர் ஜமீனில் சண்பகமன்னார் என்னும் குடிப்பெயருடைய ஒரு பரம்பரையினர்
ஆஸ்தான வித்துவான்களாக இருந்து வந்தனர்</span>. அவருகள் ஸ்ரீ வைஷ்ணவர்களில்
தென்கலையார். சண்பகார ணியம் எனப்படும் ராஜமன்னார் கோயிலிலிருந்து அவர்கள்
வந்தவர்களாதலின் அவர்களுக்கு அந்தக் குடிப்பெயர் அமைந்தது; மன்னாரென்பது
அந்த ஸ்தலத்திலுள்ள பெருமாளின் திருநாமம். இளமை யிலே செய்யுள் செய்யும்
ஆற்றல் அந்தப் பரம்பரை யினருக்கு இருந்துவந்தமையின் அவர்களுக்கு
பாலஸரஸ்வதி, பாலகவி என்னும் பட்டங்கள் அளிக்கப்பட்டு வழங்கி வந்தன.
அவர்களிற் பலர் அத்வைதத்தில் மிகத் தேர்ச்சி பெற்றவர்கள்; சம ரச்
நோக்கமுடையவர்கள். பழுவூரில் தேவி தவஞ் செய்து இறைவனை மணஞ்செய்து கொண்டதை
அவர்களுள் ஒருவர் நாடகமாகப் பாடியிருக்கின்ற னர். அது 'திருக்கல்யாண
நாடகம்' என்று வழங்கப்படும்; வேறொருவர் 'சிவராத்திரி நாட கம்' என்னும் ஒரு
நூலை மிகவும் அழகாக இயற்றி யிருக்கிறார்; அது பிரமோத்தர காண்டத்திலுள்ள
கதையை ஆதாரமாகக்கொண்டு பாடப்பெற்றது.<br />
<br />
<span style="color: blue;"><b>சண்பக மன்னார்</b></span><br />
<br />
சண்பக மன்னாரென்னும் பொதுப்பெயரையே சிறப்புப் பெயராகப் பெற்ற ஒரு பெரியார்
அக் குடும்பத்திற் பிரசித்திபெற்று விளங்கினார்; அவ ருடைய இயற்பெயர்
ஸ்ரீநிவாசையங்கா ரென்பது. சண்பகமன்னாரென்று வழங்கப்படுவாரே யன்றி<br />
அவருடைய இயற்பெயர் இன்னதென்றறிந்தவர் சிலரே.<br />
<br />
தமிழ், வடமொழி, தெலுங்கு மூன்றுமொழி களிலும் அவர் வல்லவர்; சங்கீதத்திலும்
பயிற்சி மிக்கவர்; அத்வைத சாஸ்திரத்தில் நல்ல ஆராய்ச் சியும் தெளிந்த
ஞானமும் அவற்றிற்கு ஏற்ற அனு பவமும் உடையவர்; இல்லறத்தில் இருந்தனரேனும்
மனத்துறவையுடையவராகித் தாமரையிலைத் தண்ணீர்போல் இருந்து தம் கடமைகள் அவர்
செய்து வந்தார்.<br />
<ul><br /></ul>
<span style="color: red;">"எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்<br /> முத்தர் மனமிருக்கும் மோனத்தே"</span><br />
<ul><br /></ul>
<br />
என்பது உண்மையன்றோ? அவரு அரியலூரில் பெருமாள் கோயிலின் புறத்தேயுள்ள தெற்கு
வடக் குத் தெருவில் மேற்சிறகின் வடகோடியில் உள்ள ஒரு மடத்தில் இருந்து
பாடஞ்சொல்லிக்கொண்டு சாந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.<br />
<br />
அவரிடத்தில் வேதாந்த சாஸ்திர பாடங் கேட்ட வர் பலர். அவருடைய சிஷ்யர்களாகிய
துறவிகள் பலர் பக்கத்தே உள்ள சிறு கிராமங்களில் மடங்கள் கட்டிக்கொண்டு
அமைதியாக வாழ்ந்து வந்ததன்றி அங்கங்கே உள்ளவர்களுக்கு வேதாந்த நூலுகள்
பலவற்றைப் பாடஞ்சொல்லியும் பொழுது போக்கி வந்தனர். அத்வைத சாஸ்திர உணர்வு
அரியலூரி லும் அயலிடங்களிலும் சண்பகமன்னரால் பரவி யது. அவரிடம் பாடம்
கேட்டவர்களுள் பலர் ஆல யத் திருப்பணிகள், தாடகப் பிரதிஷ்டைகள், அன்ன
சத்திரம் முதலிய தருமங்கள் செய்தனர். அவர்களுள் ஆறுமுகப் பரதேசி என்னும்
ஒருவர் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள பசுபதி கோயிலில் இருந்து வந்தனர். அவர்
தம்முடைய கல்வி வன் மையாலும் சிறந்த ஒழுக்கத்தினாலும் எல்லோரா லும் நன்கு
மதிக்கப்பட்டுப் பல தருமங்களைச் செய் தனர்; அக்காலத்தில் தஞ்சையிலிருந்த
கலெக்டருடைய நட்பைப்பெற்றுப் பசுபதி கோயிலில் தடாகம் ஒன்றை வெட்டி ஒரு
மடத்தையும் கட்டுவித்தார்.<br />
<br />
தஞ்சை ஸமஸ்தானத்தில் இருந்த பெரிய உத் தியோகஸ்தர் ஒருவர் தம்மிடம்
சண்பகமன்னாரை வருவித்து ஞானவாசிட்டமென்னும் நூலைப் பாடஞ் சொல்லும்படிக்
கேட்டுக்கொண்டார். அங்ஙனமே அவர் பாடஞ் சொல்லிவருகையில் உத்தியோகஸ் தர் சில
சமயங்கிளிற் பராமுகமாக இருந்து வந் தார். தொடர்ந்து சில நாழிகை பொறுமையாக
இருந்து கேட்பதில்லை. இடையிடையே அந்தப் புரத்துக்குச் செல்வதும் பின்பு
வந்து கேட்பதுமாக இருந்தார். "இங்ஙனம் இவருடைய மனம் இவ் வேதாந்த நூலில்
பதியாமைக்குக் காரணம் எதுவா யிருக்கலாம்?" என்று சண்பகமன்னார் ஆராய்ந்
தார். ஒரு தாசியிடம் அவ்வுத்தியோகஸ்தர் பழகி வருவதே அவருடைய
மனவேறுபாட்டுக்குக் காரணமென்பதை அறிந்தார்; ஆனால் இனி அங்கே இருப்பது
தகாதென்று உறுதி பூண்டார். ஒருநாள் இரண்டு பாக்களை இயற்றி ஒருவரிடம்
கொடுத்து உத்தியோகஸ்தரிடம் அளிக்கும்படி சொல்லிவிட்டு ஊர்வந்து செர்ந்தார்.
அவ் விரண்டு பாட்டுக்களுள் ஒன்று வருமாறு:-<br />
<ul><br /></ul>
<span style="color: red;">"பொருள்போம் புகழ்போம் புலைத்தன்மை சேரும்<br /> அருள்போம் அழகுபோம் அல்லால்-தெருள்போகும்<br /> கல்லாத நெஞ்சக் கயவர்பாற் சேர்ப்பிக்கும்<br /> பொல்லாத மாதர் புணர்ப்பு."</span><br />
<ul><br /></ul>
<br />
தெய்வங்கள் மீதும் தம்மை ஆதரித்துவந்த ஜமீன்தார் மீதும் சண்பகமன்னார் பல
செய்யுட் களையும் தனிக் கீர்த்தனங்களையும் வடமொழியி லும் தமிழிலும்
பாடியிருக்கின்றார். ஜமீன்தார் நவராத்திரி விழாவைக் கொண்டாடுவதைச் சிறப்
பித்து 'நவராத்திரி நாடகம்' என்ற ஒரு நூலை யும் இயற்றியுள்ளார்.
திருக்குடந்தை ஸ்ரீ சாரங்க பாணிப் பெருமாள் மீது ஒரு நொண்டி நாடகம்
இயற்றினார். அவருடைய புலமையும் ஞானமும் இன்றளவும் அந்தப் பக்கத்தில்
உள்ளவர்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவர் காலத்திற் குப்பின் அவருடைய
சிஷ்யர்களால் அவருக்குக் குருபூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் பெற்று
வந்தது. அவருடைய பேரராகிய வித்து வான் சடகோபையங்கார் காலம் வரையில் அது
நடந்து வந்தது.<br />
<br />
<b><span style="color: blue;">ஐயாவையங்கார்</span></b><br />
<br />
சண்பகமன்னாருக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் ஐயா
வையங்காரென்பவர். அவர் தம் தந்தையாரைப் போலவே திறமையும் பெருமையும்
உடையவராக இருந்தார்; அவரினும் அதிகமான உள்ளத்துறவை யுடையவர். அவர் இயற்றிய
பாடல்களும் கீர்த் தனங்களும் பல உண்டு. அரண்மனை வித்துவா னாக அவர் இருந்து
வருகையில் துறவுணர்ச்சி மிக்க அவரது மனம் அவ்வாழ்க்கையில் அதிருப்தி
யுற்றது. இடைவிடாமல் இறைவனுக்குத் திருப் பணி செய்தலை மேற்கொண்டு மனமொழி
மெய் களால் அவனை வழிபட்டு வாழ்நாள் முழுதையும் கழிக்கவேண்டு மென்னும் ஆவல்
அவருக்கு அதிக மாக வளர்ந்தது. தம் குடும்பத்தைப் பரம்பரை யாக ஆதரித்துவந்த
ஜமீன்தாரிடத்தில் வேதனம் பெற்றால், 'செஞ்சோற்றுக்கடன்' கழிப்பதற்காக அவரது
சமயமறிந்து சென்று உவப்பித்தலும் விசேஷ காலங்களில் யாரேனும் வந்தால் சென்று
பிரசங்கம் செய்து கௌரவித்தலும் ஆகிய பல கடமைகளைச் செய்து வரவேண்டுமென்று
எண்ணி னார். அவற்றைச் செய்துவந்தமையால் தாம் மேற்கொண்ட அப்பியாசங்களுக்கு
இடையூறு நேர்ந்தது. ஆதலின் சமஸ்தானத்தொடர்பை நீக்கி விட்டுச் சாந்தமாக
இருத்தலையே அவர் மனம் நாடி நின்றது.<br />
<br />
சரியான காலங்களில் அவர் அரண்மனைக்கு வருவதில் ஊக்கங் காட்டாமலிருந்த
காரணம்பற்றி அவர் காலத்திலிருந்த ஜமீன்தார் ஒருமுறை அவ ரிடம் அவமதிப்பாக
நடந்துகொண்டார். அச் செயல் தவறாக இருப்பினும் தம் கருத்து நிறை வேறுதற்கு
மிக்க அனுகூலமானதென்று அவர் கருதினார். அவருடைய பற்றற்ற தன்மையும் உலக
விஷயங்களில் உள்ள வெறுப்பும் இறைவன் பாலுள்ள திண்ணியதாகிய அன்பும்
வெளிப்படுதற்கு அந்த ஜமீந்தாருடைய செயல் காரணமாயிற்று.<br />
<br />
தம்மிடம் ஜமீன்தார் அவமதிப்பாக நடந்ததை உணர்ந்த ஐயாவையங்கார் நேரே பெருமாள்
கோயிலுக்கு வந்தார்; தசாவதார மண்டபத்திற் குள் நுழைந்து ஸ்ரீ
நரசிங்கமூர்த்தியின் முன் நின்றார். அதுகாறும் தம்முடைய வாழ்வு வீணாயிற்
றென்று நைந்தார்; கண்ணீர் வார மயிர்க் கூச் செறிய உள்ளம் உருகி,<br />
<ul><br />
(கட்டளைக் கலிப்பா)<span style="color: red;"><br />
"வஞ்சமாரு மனத்தரைக் காவென்று<br />
வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண் ணாகவே<br />
பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல்<br />
ப்ரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே<br />
நெஞ்சம் வாடி யிளைந்துநொந் தேனையா<br />
நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்<br />
செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும்<br />
செழித்து வாழரி யில்நர சிங்கமே"</span></ul>
<br />
என்ற பாடலை வாய்விட்டுக் கதறிச் சொல்லி அடி யற்ற மரம்போல் விழுந்து
வணங்கினார்; 'இனி நரஸ்துதியையும் நரஸேவையையும் விட்டு நரசிங் கத்தைப்
பணிந்து பாடுவதே நமது கடமையாகும்' என்னும் வைராக்கியத்தை அடைந்தார்.<br />
<br />
அன்றுமுதல் அவருடைய வாழ்க்கையில் ஒரு மாறுதல் உண்டாயிற்று. நரசிங்க
மூர்த்திக்குச் சனிக்கிழமைதோறும் மிக்க சிறப்பாக அபிஷேக மும் பூஜை
முதலியனவும் பானகம் நீர்மோருடன் பலவகைச் சித்திரான்னப் பிரசாத விநியோகங்
ளும் செய்வித்துவந்தார். அவருடைய பெருமை வரவர அதிகரித்தது. அவ்வூரிலிருந்து
கார்காத்த வேளாளர்கள் பலரும் பிறரும் அவருக்கு வேண்டிய வற்றை உதவி
வந்தனர். பல பிரபுக்கள் அவர் மூலமாகத் தங்கள் செல்வமானது திருப்பணி
முதலியவற்றிற் பயன்படுவதை ஒரு பெரும் பேறாகக் கருதி உபகரித்தனர். பல
திருப்பணிகளை அவர் செய்தார். தசாவதார மண்டபத்துக்கும் கோபுரத்துக்கும்
இடையேயுள்ள இடம் திறப்பாக இருந்தது. அங்கே விசாலமான ஒரு மண்டபத்தை அவர்
கட்டுவித்தார்; கோபுரத்தைப் புதுப்பித்தார். அவருடைய மனத்துறவின்
முதிர்ச்சியையும் பெருமையையும் பற்றி என் தந்தையார் பலமுறை
பாராட்டிச்சொல்லியிருப்பதுண்டு.<br />
<br />
<span style="color: blue;"><b>சடகோபையங்கார் </b></span><br />
<br />
ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் உண்டு. அவர்கள் ஐவரும்
தமிழ்க்கல்வியிலும் சங்கீதத்திலும் சிறந்த பயிற்சியுள்ளவர்கள். அவர்களுள்
சடகோபையங்காரென்பவர் ஐந்தாங் குமாரர்: பல பிரபந்தங்களை ஆராய்ந்து வாசித்
துப் பாடஞ் சொல்லும் ஆற்றலுடையவர்; செவ் வைச் சூடுவார் பாகவதத்திலும்
ஞானவாசிட்டம் முதலியவற்றிலும் மிக்க பழக்கமுடையவர்; அத் வைத சாஸ்திரத்திற்
சிறந்த அறிவுவாய்ந்தவர்; சங்கீதப்பயிற்சியும் அவருக்கு இருந்தது; வீணை
வாசிப்பதில் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு.<br />
<br />
அவர் காலையில் ஐந்து மணிக்கே எழுந்து விடுவார். நித்திய
கர்மானுஷ்டானங்ககளை ஒழுங் காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்
கொண்டு தம் வீட்டுத் திண்ணைக் கோடியில் அமர்ந்து கொள்வார். எந்த நூலையாவது
படித்து இன்புற்றுக்கொன்டே இருப்பார்.வீதி வழியே செல்பவர்கள் அவரைக்
கண்டால் வணக்கத்தோடு அந்தத் திண்ணையில் வந்து அவர் சொல்வன வற்றைக்
கேட்கும்பொருட்டு இருப்பார்கள். உடனே அவர் ஏதாவது தமிழ்ப் பாடல் சொல்வார்;
பிரசங்கமும் செய்வார்.<br />
<br />
சடகோபையங்காரும் என் தந்தையாரும் இளமை தொடங்கி நட்புடையவர்களாக இருந்தார்
கள்.என் தந்தையார் பாடுங்காலங்களில் அவர் வீணை வாசிப்பார்.இருவரும் சங்கீத
சம்பந்தமாக அடிக்கடி பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது
வழக்கம்.அவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் நாங்கள் குடியிருந்து வந்தோம் .
நாள் தவறாமல் அவர் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, வந்தவர்களுக்கு அவர்
சலிப்பில்லாமல் தமிழ்ப்பாடஞ் சொல்லுவார்.அப்படி அவர் சொல்லிவரும்போது
நானும் சென்று உடனிருந்து கேட்பேன்.என் தந்தையாரும் எனக்குத் தமிழ்ப்
பாடஞ் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று என்னை அவரிடம் ஒப்பித்தார்.நான்
அவருடைய பேச்சில் ஈடுபட்டு மிகுந்த ஆவலுடன் அவர் சொல்லுவனவற்றைக்
கேட்பேன்.அதனால் அவ ருக்கு என்பால் அன்பு உண்டாயிற்று. <br />
<br />
எந்த விஷயத்தைச் சொன்னாலும் அதைச் சுவைபடச் சொல்வதில் அவருக்கு இயல்பாகவே
ஒரு திறமை இருந்தது.ஒரு வேளைக்கு இரண்டு மூன்று செய்யுட்களே அவர்
சொல்லுவார்;ஆனாலும் மனத்தில் தெளிவாகப் படும்படி பல உதாரணங் களைக் காட்டி
விரிவாகப் பொருள் சொல்வார்.சிறு விஷயமானாலும் அதற்குப் பொருத்தமான செய்தி
களைச் சேர்த்துக் கொண்டு அழகு படுத்திச் சொல் லும்பொழுது என்னுடைய மனம்
அதில் ஈடுபட்டு விடும்.ஏழாம் பிராய முதலே நான் அவரிடம் பாடங் கேட்டு
வந்தேன்.அவர் சொல்லும் முறையானது எந்த விஷயத்தையும் எளிதாகவும் சுவை
யுள்ளதாகவும் தோன்றச் செய்யும். தமிழில் நான் ஈடுபட்டதற்கு அவரே
முதற்காரணம்.<br />
<br />
அவரிடம் திருவேங்கடத்தந்தாதி, திருவரங்கத் தந்தாதி,
திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டிருக்கிறேன். மிகவும் இளைய பருவத்ததிற்
கேட்டேனானாலும் அவரைப்பற்றிய ஞாபகமும் அவர் என் நெஞ்சிற் படும்படி சொன்ன
வார்த்தை களின் திறமும் இன்னும் என் மனத்தைவிட்டு அகலவேயில்லை.<br />
<br />
பல தனிப்பாடல்களையும் பல கீர்த்தனங்களை யும் சில
பிரபந்தங்களையும் அவர் இயற்றியிருக் கின்றனர். ஸ்ரீ வைஷ்ணவராயினும்
அத்வைதக் கொள்கையும் அந்த நெறியிற் பயிற்சியும் பெற்றவ ராதலின் சமரசமான
தெய்வ வழிபாடுடையவராக இருந்தனர். அரியிலூர் ஸ்ரீ ஆலந்துறையீசர் விஷயமாக ஒரு
பதிகமும் விசுவகுல வகுப்பினர் சிலருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீ காமாட்சி
யம்மை விஷயமாக ஒரு பதிகமும் ஸ்ரீ சருக்கரை விநாயகரென்னும் மூர்த்தி விஷயமாக
ஒரு பஞ்ச ரத்தினமும் இயற்றி யிருக்கிறார். அரியிற்சிலேடை வெண்பா,
ஜீவப்பிரும்ம ஐக்கிய சரித்திரம் முதலிய நூல்கள் அவராற் செய்யப்பெற்றன.
இராமாயண வண்ணமென்பது ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொன்றாக நாட்டை முதலிய ஏழு
ராகங்களால் அமைந்த ஏழு பகுதிகளை யுடையது. ஜீவப்பிரும்ம ஐக்கிய சரித்திரம்
நாடக ரூபத்திற் செய்யப் பெற்றது. அதிலுள்ள பல கீர்த்தனங்களை அவர் அடிக்கடி
சொல்லி நயங்களை எடுத்துக் காட்டுவார். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக
இருந்த கந்தசாமிக் கவிராயரென்பவர் அந்நாடகத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரம்
அளித்திருக்கிறார்;<br />
<br />
<span style="color: red;">"என்னை யறிய வெனக்கறிவித் தானரியில்<br /> தன்னை நிகருஞ் சடகோபன்" என்பது அதன் முதலிரண்டடி.</span><br />
<span style="color: red;"><br /></span>
அரியலூர் அருகேயுள்ள ஓர் ஊரிலிருந்த ஆலயித்தின் அதிகாரிகளான பஞ்சாயத்தார்
அவ் வாலயித்தின் வருவாயை உரிய பணிகளிற் செல விடாமற் பலவாறாக அழித்து வருவதை
அறிந்து அவர்களுடைய அறியாமையையும், அநியாயச் செயலையும் எடுத்துக் காட்டி
'பஞ்சாயத்து மாலை' என்னும் பெயரால் அவர் ஒரு நூல் இயற்றினார்.<br />
<br />
பொருளை மேன்மேலே ஈட்டவேண்டுமென்னும் நோக்கம் இல்லாமல் தமிழ்நூற் கடலிலே
துளைந்து விளையாடுவதொன்றையே பேரின்பமாகக் கருதும் புலவர்களுக்கு வறுமை
புதிதன்று. சடகோபையங் கார் பிறரால் நன்கு மதிக்கப்பெற்ற அறிஞராயி னும்
வறிஞராக இருந்தார். ஆனாலும், பெற்றது கொண்டு திருப்தியடையும் இயல்பு அவரது
வாழ்க் கையை இன்பமாக்கியது. அரியலூர் ஸமஸ்தா னம் வரவர மெலிவுற்றதாதலின்
அதன் ஆதரவு அவருக்கும் பிறருக்கும் இலதாயிற்று.<br />
<br />
குளிருக்குப் போர்த்துக்கொள்ள ஒரு துப்பட்டி வேண்டி ஒரு வேளாளப் பிரபுவாகிய
மல்லூர்ச் சொக்கலிங்கம் பிள்ளை யென்பவருக்கு ஒரு செய்யு ளெழுதி
யனுப்பினார்; அவர் லிங்கம்பிள்ளை யென் றும் வழங்கப்பெறுவார். அவர்
ஒன்றுக்கு இரண் டாக வாங்கி உதவினார். அச்செய்யுளின் ஈற்றடி,<br />
<br />
"துப்பட்டி வாங்கித்தர வேண்டும் லிங்க துரைச்சிங்கமே" என்பது.<br />
<br />
மாலைவேளையில் கடைவீதிவழியே சடகோபை யங்கார் செல்வதுண்டு. நானும் உடன்
போவேன். அப்பொழுது ஏதாவது பாடலைச் சொல்லிப் பொருள் கூறிக்கொண்டே போவார்.
ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து அவரை அழைத்து மரியாதையாக இருக்கச் செய்து ஒரு
தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார்.
இவ்விதம் பெற்றுக் கொண்ட வெற்றிலைகளையும், பாக்கையும் தொகுத்துவைத் துக்
கொள்வார். அவற்றை விற்று அவ்விலையைக் கொண்டு வேறு பண்டம் வாங்குவார்.<br />
<br />
அவர் இருக்கும் இடத்தில் சிலர் எப்போதும் உடன் இருப்பார்கள். அவர் ஏதாவது
பாடலைச் சொல்லிப் பொருள் கூறிக்கொண்டிருப்பார். சொல் லிச் சொல்லிப் பழக
வேண்டுமென்பது அவர் கொள்கை. "கம்பத்தை வைத்துக்கொண்டாவது கூறிப்
பழகினால்தான் படித்தவைகளை மறவாமல் இருப்போம். பாடங் கேட்பவனை மாத்திரம் உத்
தேசித்துச் சொல்லவே கூடாது. நமக்கே அது பிரயோசனம்; கல்வியில் அபிவிருத்தி
அடைய லாம்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.<br />
<br />
ஒரு நாள் அவர் வீட்டுத்திண்ணையில் இருந்து மிக இரைந்து யாருக்கோ நெடுநேரம்
பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். நான் எங்கள் வீட்டில் இருந்தே கேட்டுக்
கொண்டிருந்தேன். தடை யொன்றும் இல்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். 'கேட்பவர்
இடையில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா?' என்று நான் நினைத்தேன். சிறிது
நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தேன். அவருக்கு முன் அமர்ந்திருந்தவர்
கோபாலசாமி ஐயங்காரென்ற ஒரு முழுச் செவிடர். எனக்கு உண்டான ஆச்சரியத்துக்கு
எல்லையே இல்லை. அவர் செவிடர் என்பது ஐயங்காருக்குத் தெரியும். "கேட்பவரை
மாத்திரம் உத்தேசித்துச் சொல்லவே கூடாது; நமக்கே அது பிரயோசனம்" என்று தாம்
சொன்னதை ஐயங்கார் செயலில் காட்டினா ரென்று எண்ணினேன். பாடஞ் சொல்வதில்
அவருக்கு இருந்த அளவற்ற ஆவல் இதனால் விளங்குகிறதல்லவா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikYcQBgCuLMKQ6rrCel-0lkrTxTBS7y5f6hg0OZ04HiR_ugObU1imd2XCld_kURJzy5GU4uYKO4lu_T6qqXBcyR3QiDhjjRHeTqIuJW0TVfi2lsinViw6kdGKGIKUx97-77xO9BGD-AWM/s1600/Capture.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0433.html</a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<img border="0" height="296" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikYcQBgCuLMKQ6rrCel-0lkrTxTBS7y5f6hg0OZ04HiR_ugObU1imd2XCld_kURJzy5GU4uYKO4lu_T6qqXBcyR3QiDhjjRHeTqIuJW0TVfi2lsinViw6kdGKGIKUx97-77xO9BGD-AWM/s400/Capture.JPG" width="400" /></div>
</div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-50641986992309191102013-08-07T20:36:00.001-07:002013-08-07T20:36:48.065-07:00ஏரிக்கு கலிங்கு கட்டிய அரியலூர் மழவராயர் ஜமீன்தார் - அரியலூர் கல்வெட்டில் புதுதகவல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<br />
அரியலூரை ஆட்சி செய்த ஜமீன்தார் சந்தன ஏரிக்கு தண்ணீர் வரத்துக்காக கலிங்கு கட்டியது பற்றிக் கூறும் புதிய கல்வெட்டு கிடைத்தள்ளது .
<br />
அரியலூரில் இக்கல் வெட்டுசந்தன ஏரிக்கு போகும் வழியில் பஸ்டிப்போ
பின்புறம் ராவுத்தன் பட்டி சாலையில் உள்ள தரைப்பாலம் வாய்க்காலில் வைத்துக்
கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு பற்றி முனைவர்பட்டஆராய்ச்சியாளர்
செவ்வேள் கொடுத்து தகவலின் பேரில் அரியலூர் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்
பேராசிரியர் டாக்டர் தியாராஜன் சென்று படியெடுத்து ஆய்வு செய்தார் .
இவருடன் பேராசிரியர் ரவிச்சந்திரனும் ஆய்வில் கலந்து கொண்டார்.<br />
<br />
இக்கல் வெட்டு தரும் செய்திகளை பற்றி பேராசிரியர் டாக்டர்
தியாகராஜன் கூறியதாவது . ஏழு வரிகளில் மிக அழகிய கற்பலகையில் மிக அழகிய
கற்பலகையில் இக்கல்வெட்டு சகவருஷம் 1759 மற்றும் கலியவருஷம் 4938ம் ஆண்டில்
இது எழுதப் பட்டுள்ளது. ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் 17ம் தேதி
குருவாரம் உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் அரியலூரை ஆட்சி செய்த
விஜய ஒப்பிலாத மழவராயர் என்ற ஜமீன்தார் கலிங்கு கட்டியுள்ளார் என
இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.<br />
<br />
இவர் அரியலூர் மகாராஜா ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவராய துரை என்பரின்
மகன் எனவும் இக்கல்வெட்டு கூறுகிறது. கலிங்கு என்பது ஏரி நீர் நிரம்பி
வழிந்து செல்லும் கடைப்பகுதியில் கட்டப்படும் நீர் அமைப்பாகும் . இந்த
கலிங்கு சந்தன ஏரிக்கு கட்டப்பட்டது எனக்கருதலாம். இக்கல் வெட்டில் உள்ள
கற்பலகை தற்போது இந்த ஏரிக்கரையை ஒட்டியுள்ள ஒரு தரைப்பாலத்தில் வைத்து
கட்டப்பட்டுள்ளது . இக்கல்வெட்டு உள்ள பகுதி ஏரியின் கடைப்பகுதியாக ஒரு
காலத்தில் இருந்திருக்கலாம் . தற்போது இது தூரந்து போய் இவ்வழியாக சாலை
செல்கிறது . வரலாற்று சிறப்புடைய இக்கல்வெட்டு தற்பொழுது இப்பகுதியில்
போடப்பட்டு வரும் சாலை மண்ணால் மூடப்பட்டு மறைந்து போய்விடால்
காப்பாற்றப்பட வேண்டியது முக்கியமானதாகம் இவ்வாறு அவர் கூறியுள்ளார் .<br />
<br />
கலிங்கு பற்றிக்கூறும் கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள வாசகம்<br />
<br />
<span style="color: red;">ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759
</span><br />
<span style="color: red;">கலியாப்தஹா ளூ4938யிதில் நிகழ்கி
</span><br />
<span style="color: red;">ன்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவா
</span><br />
<span style="color: red;">ரம் உத்டதிராடங்கூடிய சுபதினத்தில் அரியலூர் மஹா
</span><br />
<span style="color: red;">றாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவ
</span><br />
<span style="color: red;">ர்கள் குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவ
</span><br />
<span style="color: red;">ர்களால் யிந்த கலுங்கு தர்மஞ் செய்யலாச்சது . </span><br />
<br />
(ஸ்வஸ்தி ஸ்ரீசாலிசாகன சகாப்தஹாளூ 1759 கலியாப்தஹா ளூ4938யிதில்
நிகழ்கின்ற யோவிளப் ளூசித்திரை மீ 17 உகுருவாரம் உத்டதிராடங்கூடிய
சுபதினத்தில் அரியலூர் மஹாறாசறாச ஸ்ரீகுமார ஒப்பிலாத மழவறாயதுரை அவர்கள்
குமாரர் விசைய ஒப்பிலாத மழவறாயதுரை அவர்களால் யிந்த கலுங்கு தர்மஞ்
செய்யலாச்சது .)
</div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-70739956968144861602013-03-22T09:14:00.003-07:002013-03-22T09:14:26.042-07:00கேரள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ள வன்னியர்களை பற்றிய ஓலைசுவடியில் "அரியலூர்ப் பள்ளி வில்லிப் படையாண்டவர் கதை " பற்றிய செய்தி :<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
இதில் வழக்கம் போல வன்னியர் புராணத்தை பற்றிய செய்திகளை சொல்லிவிட்டு பிறகு சில சுவையான செய்திகளை அந்த ஆவணம் கூறுகிறது.<br />
<br />
அதாவது
வன்னியர்கள் சிலர் சந்திரகிரியில் இருந்து காஞ்சிபுரம் சென்றதையும் ,
அங்கு காஞ்சிபுர மன்னர் தங்களிடம் பெண் கேட்டதால் அவரை சிரத்சேதம்
செய்துவிட்டு வேலூருக்கு சென்று தங்கிய போது , <br />
<br />
அப்பொழுது அங்கு ஆட்சி செய்த மன்னர் இவர்களுக்கு <br />
<br />
<span style="color: red;">“சந்திரபதி பள்ளி வில்லி படையாண்டவர்கள் ” </span><br />
என்றும் <br />
<span style="color: red;">“அரியகுல மழுவெறி ராயர் ” </span><br />
<br />
எனவும் விருதுகள் வழங்கியதையும் தெரிவிக்கிறது . சில காலம் அங்கு வாழ்ந்தனர் . <br />
<br />
பிறகு
பாண்டிய நாடு சென்று , பாண்டிய நாட்டில் விக்கிரம பாண்டியனுக்கு சேவை
செய்து வாழும் நாளில் , அப்பகுதியில் தொல்லை தந்து வந்த ஒரு புலியைக்
கொன்று , மற்றொரு புலியை வளைத்து பிடித்து வீரச் செயல் புரிந்த செய்தி அந்த
சுவடியில் உள்ளது . அங்கு பண்ணை அமைத்து , புதிய நகரம் ஏற்ப்படுத்தி அதில்
விநாயகர் கோவில் உண்டாக்கி மற்றவர் துதிக்கும் நிலையில் வாழ்ந்து
மேற்கூறப்பெற்ற தென்காசி பாண்டியனுக்கு உதவி வந்திருக்கின்றனர் . <br />
<br />
<span style="color: blue;">புலியைக் கொன்றதால் பெற்ற விருது : </span><br />
======================================= <br />
பாண்டிய நாட்டில் தொல்லை தந்த புலிகளை கொன்றதால் இவர்களுக்கு <br />
<br />
“<span style="color: red;">மகாபெரும் சேனை பள்ளி வில்லி படையாண்ட பராக்கிரமர் ” </span><br />
<br />
என்ற விருதை பாண்டிய மன்னன் வழங்கி சிறப்பித்துள்ளார் . மேலும் <br />
<br />
மீன்கொடி
, கானக் கவரி , கனகத் தண்டிகை , வெற்றி சங்கம் (சங்கு ) ஆகிய வரிசைகள
கொடுத்ததோடு தேவநல்லூர் மற்றும் கயத்தாறு ஆகிய சீமைகளை காவல் காத்து
வரும்படியும் உரைத்திருக்கிறார் . <br />
<br />
<span style="color: blue;">காசி விசுவநாதர் கோவிலில் மடம் கட்டுதல் : </span><br />
============================================= <br />
<br />
அப்போது
செகமெல்லாம் புகழும் , உண்மை உபதேசம் செய்த சற்குருவாம் தேசிகருக்கு
(காஞ்சி சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் ) தென்காசி காசி விசுவலிங்கேசர்
ஆலயத்ததில் மடாலயம் ஒன்று ஏற்ப்படுத்தி தந்துள்ளனர்.<br />
<br />
இந்த
சிவந்த பாதம் ஊருடைய தேசிகர் வன்னியர்களின் குருவாக காஞ்சியில் வாழ்ந்து ,
பின்பு பாண்டிய நாட்டில் தென்காசியில் வாழ்ந்த செய்தி வரகுண பாண்டிய
வன்னியர் வெளியிட்ட தென்காசி செப்பேட்டின் வாயிலாகத் தெரிகிறது .
ஒலைசுவடியின் மூலம் முதன்முதலாக இச்சுவடியில் தான் காண முடிகிறது . <br />
<br style="color: blue;" />
<span style="color: blue;">குலசேகர பாண்டியனின் பகைவரை வெல்லுதல் : </span><br />
============================================== <br />
<br />
பிறகு
வள்ளியூரில் ஆட்சி புரிந்து வந்த குலசேகரப் பாண்டியனின் பகைவரான மன்னன் ,
மதிப்பன் என்ற இருவரை வதைத்து அவர்களின் தலைகளை கொய்து , மன்னன் முன்பாக
கொண்டு சென்று வைத்திருக்கின்றனர் . <br />
<br />
மன்னன் மகிழ்ந்து பலவித வரிசைகளை இவர்களுக்கு அளித்திருக்கிறார் . <br />
<br />
<span style="color: blue;">ஆழ்வார்குறிச்சியில் ஆட்சி புரிதல் : </span><br />
=============================== <br />
இறுதியாக
தென்காசிக்கு தெற்க்கே உள்ள ஆழ்வார் குறிச்சி என்னும் திருத்தலத்துக்கு
வந்து தங்கி ஆட்சி புரிந்துள்ளனர் . இச்செய்தியை ஓலையில் <br />
<br style="color: red;" />
<span style="color: red;">
“ஆள்வார் குறிச்சியதி பண்ணையம் பதியாள் வீரர்களான வன்னிய குலத்தோர்
பொன்போலுலகில் பொலிந்து வாழ்ந்துயர்ந்தோராகிய சந்திரபதி அரியலூர் பள்ளி
வில்லி படையாண்டவர்கள் ” </span><br />
<br />
என்று குறிப்பிட்டுள்ளது . <br />
<br />
வன்னியர்களின்
அறக்கொடைகளையும் புலவர்களை போற்றியமையும் புகழ்ந்து கூறும் “திருக்கை வளம்
” என்னும் நூல் பன்னீராயிரம் பண்ணையை ஆட்சி செய்து வந்த வன்னிய
பாளையக்காரர் பற்றி கூறும்போது <br />
<br />
“-<span style="color: red;">------------- மெச்சு பண்ணை </span><br />
<span style="color: red;">பன்னிரண்டாயிரத்தோன் மேற்பகருங் கட்டியகொத்துக் </span><br />
<span style="color: red;">கின்ன லிலாமற் சொர்ன மிசையுங் கை</span> “<br />
<br />
என்பது அதிலுள்ள பாடல் வரிகள் . <br />
<br />
அதாவது
பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு வந்த அரசன் மீது 'கட்டிய கொத்து ' என்னும்
நூலை பாடிய புலவருக்கு மன்னர் தங்கங்களை பரிசளித்தான் என்பது பொருள் . <br />
<br />
திருக்கை வள உரையாசிரியர் பிரசங்க பூஷணம் குக ஸ்ரீ.பு.பா.ரத்தினசபாபதி நாயகர் அவர்கள் <br />
<br />
"<span style="color: red;">பாண்டிய
நாட்டில் பன்னீராயிரம் பண்ணையை ஆண்டு கொண்டிருந்த அக்னி வம்ச சத்திரிய
வன்னிய மகாராஜாவாகிய, கட்டிய நயினார் வம்சத்திலவதரித்து , காரைக்கால் அக்னி
வம்ச சத்திரிய மகா சபையில் அக்ராசனாதிபதியாயிருந்த ஆ.வை.தசவீர பூபதி
நாயகர்வர்களால் கடந்த பவள ஆண்டு (கி .பி . 1873 ) பங்குனி மாதம் அச்சிட்டு
முதன்முதலில் திருக்கை வளம் வெளிவந்தது</span> " <br />
<br />
என்று எழுதிருக்கிறார் . <br />
<br style="color: blue;" />
<span style="color: blue;">தென்காசி வன்னியர் செப்பு பட்டயமும் இவோலைச் சுவடியும் :</span><br />
=====================================================================<br />
<br />
தமிழ்நாட்டரசு
தொல்லியல் ஆய்வாளர் திரு.நடன காசிநாதன் அவர்கள் எழுதிய வன்னியர் என்னும்
நூலில் செப்பு பட்டயம் எண் 21 ஆக தென்காசி திரு.முனிசாமி நாயுடுவிடமிருந்து
தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆயுவுத்துறை வாங்கி , குற்றாலம்
அகழ்வைப்பகத்தில் வைத்து பாதுக்காக்கபெரும் செப்பேட்டில்
கூறியிருக்கிறவாறே, இந்த ஒலைசுவடியிலும் வன்னியரின் பிறப்பும், அசுரர்களை
வதைத்து இலங்கை சென்று அரசனை வென்று ஐந்து கன்னிகளை , ஐந்து வன்னிய
குமாரர்கள் மணந்ததும் , பின்பு அவர்கள் எந்தெந்த பகுதியில் ஆட்சி
செலுத்தினர் என்றும் கூறப்பட்டுள்ளது . <br />
<br />
ஆதலால் இவ்வோலைச்சுவடி 18-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் . <br />
<br />
ஆனால் இவ்வோலைச்சுவடியில் , செப்பு பட்டயத்தில் கூறப்படாத சில அரிய செய்துகளும் உள்ளன .<br />
<br />
மேலே
கூறப்பட்டுள்ள வரகுணராம பாண்டிய வன்னியனார் செப்புப்பட்டயத்தில் (வன்னியர்
, செப்புபட்டயம் எண் - 9) மன்னர் விருதுகளில் ஒன்றாக “சந்திரபதி அரசுபதி
வில்லி வன்னியகுலாதிபதி ” என்பதும் இவ்வோலைச் சுவடியில் காணப்பெறும்
விருதும் ஒன்று போல உள்ளன .<br />
<br />
ஆகவே , இவ்வோலைச் சுவடியின்
கூற்றால் , பன்னீராயிர பண்ணையை ஆண்டு வந்த கட்டிய நயினார் வம்சத்தினர் ,
அரியலூர் மழவராய நயினார் வழி வந்தவர்கள் என்று உணரமுடிகிறது . <br />
<br />
<span style="color: blue;">ஆதாரம் : </span><br />
======== <br />
<br style="color: red;" />
<span style="color: red;">நூல் :பெரம்பலூர் மாவட்ட தடயங்கள் </span><br />
<span style="color: red;">பக்கம் :43 </span></div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-58417408098092570052012-09-30T00:18:00.004-07:002012-09-30T00:18:56.879-07:00தகடூரும் அதியமானும் : (தகடூர் = தருமபுரி ) --- "தருமபுரி வரலாறு" நூலிலிருந்து <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmvFVE1iXeNmPg-oNd1GNUyDMpS5fGyKPx43SBVmmnDppXLP3sDuIQJmGL_cTzHLkD1o_znahexkIcjUijYvW4Yarb_ez7vzTa-dVgTi9ECTEq-cOS3ioB8E5vA3mm3xw4UFDzHWm8Rcg/s1600/111.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="346" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmvFVE1iXeNmPg-oNd1GNUyDMpS5fGyKPx43SBVmmnDppXLP3sDuIQJmGL_cTzHLkD1o_znahexkIcjUijYvW4Yarb_ez7vzTa-dVgTi9ECTEq-cOS3ioB8E5vA3mm3xw4UFDzHWm8Rcg/s400/111.png" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrQkPNpvlHBjYSADBtWwuheIfxkvIq0B0SHs2cHonKp0kuJ-ORVDFHucTynFOJosBGVlSCzKDlr0dtejrspsX6-pOg5J4cdYI48ooPpdv2oPLhLyP537BSvUk-2aPB-AjdSAaZQ-ynaAo/s1600/112.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrQkPNpvlHBjYSADBtWwuheIfxkvIq0B0SHs2cHonKp0kuJ-ORVDFHucTynFOJosBGVlSCzKDlr0dtejrspsX6-pOg5J4cdYI48ooPpdv2oPLhLyP537BSvUk-2aPB-AjdSAaZQ-ynaAo/s640/112.png" width="424" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Vab7BGSdA4S4Ek_B9dCfMhhhmCxtYXuM1rYeGMPpRsWCGl9Qz2oShrfVJWy-3O4XvFwzYEgEEOT15PqufzTttjcV7qhDQQVZ9PMVvdSVXigNKbnk6u9hJlsPQOpcbLASzuUXope96cQ/s1600/113.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Vab7BGSdA4S4Ek_B9dCfMhhhmCxtYXuM1rYeGMPpRsWCGl9Qz2oShrfVJWy-3O4XvFwzYEgEEOT15PqufzTttjcV7qhDQQVZ9PMVvdSVXigNKbnk6u9hJlsPQOpcbLASzuUXope96cQ/s640/113.png" width="488" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglm3J9yvA-La87q_LPnmnNu0n9znrxXxus2OJSLcoDPW5h7i0QMpTetzUjV9G5twBu4JGX2E_-vMF4sxj_SI4YHB9YYjV26NevVuolUtZc03Q86ab5UY7qnXVItNDHsRb-7JGq8th_aR0/s1600/114.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEglm3J9yvA-La87q_LPnmnNu0n9znrxXxus2OJSLcoDPW5h7i0QMpTetzUjV9G5twBu4JGX2E_-vMF4sxj_SI4YHB9YYjV26NevVuolUtZc03Q86ab5UY7qnXVItNDHsRb-7JGq8th_aR0/s640/114.png" width="424" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmBOo2HIxQhh1h0UC26ZwLv7LBe-FsutAa-UxZWswLKkXlNJEOKe9N0Obdo1UrKDGmJDIQOv6s1U0C_PDFE1fcjFb8cMRjDiQfbugOI_-BFSKl4y71d6O56ohZLRDcKuaNv98hbfllKCE/s1600/115.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmBOo2HIxQhh1h0UC26ZwLv7LBe-FsutAa-UxZWswLKkXlNJEOKe9N0Obdo1UrKDGmJDIQOv6s1U0C_PDFE1fcjFb8cMRjDiQfbugOI_-BFSKl4y71d6O56ohZLRDcKuaNv98hbfllKCE/s640/115.png" width="512" /></a></div>
<br />
<br /></div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-35266954848351557152012-09-29T21:06:00.000-07:002012-10-01T01:14:51.398-07:00 ஸ்ரீ மதுமலா்க்கா வீரபத்திரா் சுவாமி : ((மழவர்கள் வழிபடும் வீரப்புத்திரர் = மழவர் என்போர் புராதன காலத்து சேர நாட்டின் வன்னியர் மரபைச் சேர்ந்தவர்கள். சேர நாட்டின் பெரும் போர்வீரா்களாவர் ))<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg04oINHKSxuRAHBzoD9_0i4dvwFzoN5gHnHKXv9Tot6kgtgT5uC4Re8aNECKC6RW_rrhvmYQlPTHRzu1kyqyGFYMQ6r9j-MuiyLLTJLKEaStwSUeR2A3hOSjBUy7JlI5e41ziRWQ_eaw/s1600/582799_270485739733212_418092454_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><br class="Apple-interchange-newline" /><img border="0" height="236" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg04oINHKSxuRAHBzoD9_0i4dvwFzoN5gHnHKXv9Tot6kgtgT5uC4Re8aNECKC6RW_rrhvmYQlPTHRzu1kyqyGFYMQ6r9j-MuiyLLTJLKEaStwSUeR2A3hOSjBUy7JlI5e41ziRWQ_eaw/s400/582799_270485739733212_418092454_n.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
கிழக்கிலங்கையின் புரதான<br />
இந்துக் கோயில்கள்<br />
மட்டக்களப்பு மாவட்டம்<br />
<br />
===================<br />
<br />
மட்டக்களப்பு நகரின் வடக்கே சுமார் 12 கி.மீ தொலைவில் ஏறாவூர் எனும் பழைமை வாய்ந்த கிராம்ம் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் எகுளப்பற்று என்றழைக்கப்பட்ட பகுதியின் தலைப்பட்டினமாக ஏறாவூர் விளங்கியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 5 ஆம் குறிச்சி எனும் இடத்தில் பிரதான வீதியில் தென்மேற்குப் பக்கத்தில் வீரபத்திரா் ஆலயம் அமைந்துள்ளது.<br />
<br />
வீரபத்திரா் ஆலயத்தின் அமைவிடம்<br />
<br />
வடக்கு தெற்காக சுமார் 70 கி.மீ நீளத்துடன் ஒடுக்கமாகக் காணப்படும் மட்டக்கப்பு வாவியின் வட கோடியில் ஏறாவூர் கொம்பன் ஆலயம் அமைந்திருப்பது இதன் பண்டைய சிறப்பையும் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது. இவ்வாலயத்தின் வடக்கிலும் கிழக்கிலும் குடிருப்புகளும் தெற்கிலும் மேற்கிலும் வயல்கள் நிறைந்த மருத நலப்பரப்பும் காணப்படுகிறது. வயல்களை அடுத்து முகுந்தனை ஆற்றின்கிளை ஆறும் அதனை அடுத்து வயல்களுக்கு மத்தியில் முகுந்தனை ஆறும் காணப்படுகிறது. இவ் ஆறுகளும் கிளை ஆறுகளும் இப்பகுதிக்கு செழிப்பையும் வனப்பையும் கொடுத்து மட்டக்களப்பு வாவியில் காணப்படுகிறது.<br />
<br />
<br />
சங்க இலக்கிய நூலான<br />
<br />
சிறுபாணாற்றுப்படையில் ஏறு மாநாடு<br />
சுமார் 2200 வருடங்கால சைவப் பாராம்பாரியத்தைக் கொண்ட ஏறாவூர் பகுதி பண்டைய காலங்களில் ஏறுமாவூர், ஏறுமாநாடு, ஏறுமாறாவூர், எகுளப்பற்று போன்ற பெயர்களில் அழைக்கப்பட்டுவந்துள்ளது. சங்ககால நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் நாகர்குலத்தைச் சேர்ந்த நல்லியக்கோன் எனும் நல்லியக்கோடான் என்ற சிற்றரசனால் ஏறுமாநாடு என்ற சிறப்புப் பெயரோடு ஆட்சி செய்யப்பட்ட இடமே இந்த ஏறாவூர் என அறிஞர்கள் கூறுகின்றனர். இன்றய ஏறாவூர் நகரின் வடபகுதியில் இருந்த இவ்விடம் அன்று காட்டுமாஞ்சோலை என கூறப்பட்டது. நிலத்தில் வெளிலே படாத இக்காட்டு மாஞ்சோலை பகுதி அமைந்திருந்த இடத்தில் தான் பத்திரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இதன்படி சங்ககால சிற்றரசர்களின் தொடர்புடைய பகுதியாக ஏறாவூர் விளங்குவது இதன் தொன்மையான இந்து பாரம்பரியத்திற்கு மேலும் இவ்வூர் பண்டைய காலத்தில் வலிமை மிக்க நாகர் குலத்தவர்களால் பரிபாலிக்கப்பட்டு வந்திருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. நல்லியக் கோடன் மன்ன்னின் கொம்பன் யானை நீராடுவதற்கு கட்டப்பட்ட துறையே கொம்பன் துறையாகும். இன்று இது கொம்மாதுறை என அழாக்கப்படுகிறது.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqNr0BPZLiAhwv9dNK8HahMQnHYWt1A-aoF2UyGHE76Ujh6A8k6NnbxQBCTFdcTMf1IDJmsZN8p6ycfJdvURlMfTXFcoIydRKspUmICZc6YDc_9oWIbAqngfhmy-ZoUQs369IasXjm3w/s1600/293204_269504839831302_1490949309_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqNr0BPZLiAhwv9dNK8HahMQnHYWt1A-aoF2UyGHE76Ujh6A8k6NnbxQBCTFdcTMf1IDJmsZN8p6ycfJdvURlMfTXFcoIydRKspUmICZc6YDc_9oWIbAqngfhmy-ZoUQs369IasXjm3w/s400/293204_269504839831302_1490949309_n.jpg" width="400" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggzGzheB_yTzHKFNBx_D7pjHjZhmE6kfWJuYm2-UKrMoU3olU_rym0pfV8Vq5-jW3LVua_jz9XWpykQgGcM5kmJeLfk7UiGrdffYYN8yI_QrIyHXK9-DrAbkLt5u6wWl1nudbwm4pHSQ/s1600/293316_269505669831219_1361418095_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggzGzheB_yTzHKFNBx_D7pjHjZhmE6kfWJuYm2-UKrMoU3olU_rym0pfV8Vq5-jW3LVua_jz9XWpykQgGcM5kmJeLfk7UiGrdffYYN8yI_QrIyHXK9-DrAbkLt5u6wWl1nudbwm4pHSQ/s400/293316_269505669831219_1361418095_n.jpg" width="400" /></a></div>
<br />
2200 வருடகால பாரம்பரியம் மிக்க ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு<br />
<br />
ஏறாவூர் வீரபத்திரா் கோயில் சுமார் 750 வருடம் பாரம்பரியம் கொண்டது என குறிப்புகள் கூறுகின்றன. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மாகோன் மற்றும் குளக்கோட்டன் காலத்தில் இவ்வாலயம் தோற்றம் பெற்றதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது சுமார் 2200 வருடங்களுக்கு முன்பாக கூத்திக மன்னன் காலத்தில் ஸ்தாபிக்கபட்டிருக்கலாம் என நம்ப இடமுண்டு. கி.பி 2 நூற்றாண்டில் மகாசேன்னால் கிழக்கிலங்கைக் கரையில் 3 கோயில்கள் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அழிக்கப்பட்ட மூன்று ஆலயங்களும் சிவாலயங்கள் என வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இவை கோகர்ண என்னுமிடத்திலும் கலந்தனின் ஊரிலும் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது கோகர்ணம் என்பது திருகோணமலை ஆகும். கலந்தனின் ஊர் பானமைக்கருகில் உள்ள சாஸ்திராவெளி என அடையாளம் காணப்பட்டுள்ளது ஏரக்காவில என்பது ஏறாவூர் எனவும் மகாசேனால் அழிக்கப்பட்ட ஆலயம் இந்த வீரபத்திரா் ஆலயமே எனவும் சில குறிப்புகள் கூறுகின்றன. அண்மைக்கால ஆய்வுகளின் படி ஏரக்காவில என்பது “எருவில்” என்னுமிடத்தில் களுவாஞ்சிக் குடிக்கருகில் உள்ள எருவில் போராதீவு எனவும், இங்கிருந்த ஓர் சிவாலயமே மகாசேனனால் அழிக்கப்பட்ட ஆலயம் எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, ஏறாவூர் வீரபத்திரா் ஆலயத்தின் தொன்மையே இவ்வாறான ஓர் கூற்றுக்கு சான்று.<br />
<br />
<br />
வீரபத்திரா் வழிபாடும் மழவர்களும்<br />
<br />
ஏறாவூர் உள்ள வீரபத்திரா் வழிபாடு 2200 வருடங்களுக்கு முற்பட்ட பாரம்பரியம் கொணடது எனக் கூறுவதற்கு ஓர் முக்கிய காரணமுண்டு. மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறும் “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” எனும் நூலில் காணப்படும் சாதித் தெய்வக் கல்வெட்டில் ஒவ்வோர் குலத்தைச் சேர்ந்தவர்களுக்குரிய தெய்வங்களைகப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. இதில் மழுவர் எனும் குலத்தவர்ளுக்கே வீரபத்திரா் எனக் கூறப்பட்டுள்ளது. வீரபத்திரருக்கு பூஐை செய்வனுக்கு மழவனே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுக் குறிப்பின்படி மழவர்கள் வாழ்ந்து வந்த இடங்களிலெல்லாம் வீரபத்திரருக்கு ஆலயம் கட்டி வழிபாடு நடத்திருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. மழுவர்களை மழவர் குடி எனவும் அழைத்தார்கள். இவர்கள் புராதன காலத்து சேர நாட்டின் வன்னியர் மரபைச் சேர்ந்தவர்கள் எனவும் கிறிஸ்துவுக்கு பிட்பட்ட காலத்தில் தமிழகத்திலுள்ள கொம்பு நாட்டின் வழியாக காவேரியின் வடமேற்குக் கரையிலுள்ள அரியலூர், பெரம்லூர் போன்ற பகுதிகளில் குடியேறி விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் எனவும் தமிழக ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன. இவர்கள் சேர நாட்டின் பெரும் போர்வீரா்களாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி அகராதியிலும் இதே அர்த்ததில் மழவன் என்பதற்கு நகர்தாப்போன், அஞ்சாதவன், பிடித்ததை விடாதவன் எனும் பொருள் குறிப்பிட்டுள்ளது. அரியலூர் எனும் பண்டைய “அரிசின்” பகுதியில் வாழ்ந்த மழுவர்களின் வழிவந்த பாளையக்கார குறுநில மன்னர்கள் சுமார் 5 நூற்றாண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள் என தமிழக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.<br />
<br />
<br />
கூத்திகன் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியில் குடியேறிய மழுவர்கள்<br />
<br />
<br />
மிகப் புராதன காலத்தில் இம்மழுவர் குடியினர் மட்டக்களப்புத் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கி.மு 2 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தின் மன்னனான சேனனின் மகன் கூத்திகனே மகாவம்சம் குறிப்பின் படி இலங்கையின் இரணடாவது தமிழ் மன்னனாவன். இவனது ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்புப் பகுதியுடன் நெருங்கிய தொடர்பு இருந்த்தாக மட்டக்களப்பு மாம்யம் குறிப்பிடுகிறது. கூத்திகனின் ஆட்சிக் காலத்தின் போதே மட்டக்களப்பு பகுதியில் மழுவர் குலத்தவர்கள் முதன்முருதல் குடியமர்த்தப்பட்டார்கள் என நம்பப்படுகிறது. இதன் பின்பு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்திலும் மழுவர்கள் இங்கு வாந்தார்கள் என குறிப்புகள் கூறுகின்றன. மழுவர் குடியினர் மட்டக்களப்புப் பகுதிக்கு குடி வந்த கால அடிப்படையை வைத்துப் பார்க்கும் பொழுது ஏறாவூர் வீரபத்திரா் வழிபாடு முதன்முதலாக கி.மு 2 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்று, கி.பி 10 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று, கி.பி 13 ஆம் நூற்றாண்டில் மகோன் காலத்தில் மேலும் செல்வாக்குடன் விளங்கிருக்க வேண்டும் எனக் கூறக் கூடியதாக உள்ளது. இவர்கள் இன்றும் பாணடிருப்பு, அக்கரைப்பற்று பகுதிகளில் பரவலாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.<br />
<br />
<br />
http://epaper.thinakkural.com/ — in Eravur, Sri Lanka.<br />
</div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-50214902695941868182012-01-02T03:08:00.000-08:002013-06-30T05:17:50.059-07:00சேரர் வழிவந்த மழவர் இனம் (வன்னியர் )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
மழவர் குடிமக்கள் தண்டாரணியம், குதிரைமலை, அதியமானின் தகடூர், ஓரியின் கொல்லிமலை போன்ற தமிழ்நாட்டின் வடநிலப் பகுதிகளில் வாழ்ந்துவந்தனர்.<br />
<br />
<br />
இவர்கள் மணிகட்டிய வேலை ஏந்திப் போர் புரியும் பாங்கினர் <br />
வள்ளல் அதியமான் நெடுமான் அஞ்சி “மழவர் பெருமகன்” எனக் குறிப்பிடப்படுகிறான். <br />
<br />
<br />
<span style="color: red;">வள்ளல் ஓரி மழவர் பெருமகன் எனக் குறிப்பிடப்படுகிறான். (மழவர் பெருமகன் மாவள் ஓரி) அதியமான் ஒருவர் “வஞ்சியர் குலபதி எழினி” எனக் கல்வெட்டொன்றில் கூறப்படுள்ளார் </span>.<span style="color: blue;">இதன் மூலம் வஞ்சியை ஆண்ட சேரர் அதியமான் மரபினரே என்பது தெரிய வருகிறது. சேரரும் , அதியரும் முறையே “மழவர் மெயம்மறை ”</span><br />
<br />
என்றும் “மழவர் பெருமகன் ” என அழைக்கப்பட்டனர் .இதமூலம் மழவர் என்பாரும் சேரர் குடியினர் என்பது விளங்கும் .<br />
<br />
<br />
சேரர் வில் இலச்சினையைப் பெற்றவர் .கொல்லி மழவரும் வில் இலச்சினையை பெற்றவர் . <span style="color: blue;">வன்னியர் (பள்ளி ) இனத்தவரின் குலச் சின்னமும் வில்தான்.. அதனால்தான் சிலை எழுபதில் வன்னியர் எடுத்த வில்லே வில் என்று வில்லின் சிறப்பை பற்றி கம்பர் பாடியுள்ளார் .</span><br />
<br />
<br />
<b><span style="color: red;">வன்னியர் ஏந்திய வில்லே, வில்</span></b><br />
<br />
மலையினிற் பொலங்கொண் மேரு மலையன்றி<br />
மலைமற் றுண்டோ<br />
கலையினி லுரைப்ப வெண்ணெண் கலையன்றிக்<br />
கலைமற் றுண்டோ<br />
அலையினி லுகாந்த நீத்தத் தலையன்றி<br />
யலைமற் றுண்டோ<br />
சிலையினிற் றிறங்கூர் வனியர் சிலையன்றிச்<br />
சிலைமற் றுண்டோ ? 3<br />
<br />
எனவே சேரர், மழவர் என்பார் வன்னியர் இனத்தவர் .<br />
<br />
<br />
சேரரின் கிளைக் குடியினராகக் கருதப் பட்டவர்கள் மழவர்கள். இவர்கள் போர்க் குடியினர். மழவர்களின் போர்த்திறன் கண்டு சோழ மன்னர்களும் மழவர் படையணியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர்.<br />
<br />
<span style="color: red;">மழவராயர்,மானங்காத்த மழவராயர் போன்ற பட்டங்கள் வன்னியருக்குண்டு</span>.எந்த வகையில் பார்த்தாலும் இப்பட்டம் நமக்கு சாலப்பொருந்தும்.<br />
<br />
மழவராயர் = மழவர் +அரையர்<br />
<br />
மழவர் தலைவர் என்பது இதன் பொருள். மழவர் என்பவர் யார்?<br />
அவர்கள் ஒர் போர்க் குடியினர்.<br />
<br />
மழவர் தாயகம் எது தெரியுமா? மழகொங்கம் எனப்பட்ட பகுதி.இது தருமபுரி,நாமக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.இப்பகுதியில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருபவர்கள் யார்?வன்னியர்கள்தான்.<br />
தகடூர் மழவர் என்றும் கொல்லி மழவர் என்றும் மழவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.<br />
தருமபுரியை ஆண்ட அதியமான் மழவர் மரபினன்.<br />
<br />
மழபாடி - மழவர் படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே.மேலும் சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.<br />
<br />
கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி மழவராயர் மகளாவார். உத்தம சோழனின் மனைவி கிழானடிகள் மழவராயர் மகளாவார். இராசராச சோழனின் மனைவியரில் பஞ்சவன் மாதேவி மழவராயர் மகளாவார். மேற்கண்ட சான்றுகளால் பழமையான மழவர் குடியினர் சோழ மாமன்னர்களின் பெருமைக்கும் புகழுக்கும் காரணமானவர்களாக விளங்கினார்கள் என்றும் இன்று வாழும் மழவராயர்கள் இப் பெருமக்களின் வழித்தோன்றல்கள் என்றும் அறிய முடிகிறது. பாண்டியநாட்டின் அரியனைக்கு மழவராயன் என்ற பெயரும் உண்டு.<br />
<br />
மழவர் அடிப்படையில் சேரர் தொடர்புடையவர்கள்.<br />
<br />
சேரர் குலச் சின்னம் - வில்<br />
மழவர் குலச் சின்னம் - வில்<br />
வன்னியர் குலச்சின்னம் - வில்<br />
<br />
மழவர்கள் யார் என்பதைக் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களைப் படித்தவர்கள் அதே மழவர் குறித்த சில அறிஞர்களின் கருத்தை மட்டும் அறிய ஏனோ மறந்துவிடுகின்றனர்.<br />
<br />
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHOSfx8nRG87tnj3g0lCVvgJDMomYpTfo-qbTxT0pZGbF67snx2Sg8_MC_uGfnrCP1O-BEc4WtC1aVCOWT6s4Fh9z7-eAAlhCLaUtWykbViYt9ZXy6_6JpNxEla3FMb5YQFmgIDC2HDQ/s1600/Vanniyar-Varalaru-Part-1-book.jpg"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhHOSfx8nRG87tnj3g0lCVvgJDMomYpTfo-qbTxT0pZGbF67snx2Sg8_MC_uGfnrCP1O-BEc4WtC1aVCOWT6s4Fh9z7-eAAlhCLaUtWykbViYt9ZXy6_6JpNxEla3FMb5YQFmgIDC2HDQ/s320/Vanniyar-Varalaru-Part-1-book.jpg" /></a><br />
<br />
<br />
<span style="color: blue;">மழவர் யார் என்பதைக் குறித்து இரு அறிஞர்கள் பின்வருமாறு தம் நூல்களில் கூறியுள்ளனர்.</span><br />
<br />
<span style="color: red;">வரலாற்றாசிரியர் திரு.ராசமாணிக்கனார் :</span><span style="color: blue;">அரியலூர் மழவராயர்கள் வன்னியருள் படையாட்சி மரபினர்.போர்வீரர் குடியினராக இருப்பதாலும்,படையாட்சி மரபினர் என்பதாலும் இவர்கள் சங்ககால மழவர் வழி வந்தவர் எனக் கருத இடமுள்ளது.</span><br />
<span style="color: red;">"தமிழ்த்தாத்தா" திரு.உ.வே.சாமிநாதையர்: </span><span style="color: blue;">மழவர் என்பார் சங்ககாலத்தில் அறியப்பட்ட போர்க்குடியினர்.இவர்கள் தற்போது வன்னியர் வகுப்பினராக வாழ்ந்து வருகிறார்கள்.</span><br />
<br />
<span style="color: red;">இன்னொரு செய்தி :அறிஞரான திரு.உ.வே.சாமிநாதையர்அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் வன்னியர்களான மழவராயர்கள் ஆண்ட அரியலூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகத் திகழ்ந்தவர்.</span><br />
<br />
இன்றும் தென்னார்க்காடு மாவட்டம் என சொல்லப்படும் கடலூர் , விழுப்புரம் பக்கத்தில் மழவராயனூர் என்று ஊரே இருக்கிறது . இங்கே வாழ்பவர்கள் அனைவரும் படையாட்சி (வன்னியர் ) என பொதுவாக அழைக்கப்படுவார்கள் .. ஆனால் , திருமணம் போன்ற சுபகாரியங்களின் பத்திர்க்கைகளில் தம் பெயருக்கு பின்னால் மழவர் அல்லது மழவராயர் என்று எழுதுவர் .<br />
<br />
அதுமட்டுமா , <span style="color: red;">மழவரான சேர மன்னர்களை அக்னி குல க்ஷத்ரியர் என்றுதான் வில்லிபாரதம் சொல்கிறது .. இன்று தமிழகத்தில் அக்னி குலத்தவர் என்று கூறப்படுபவரும் வன்னியர் மட்டுமே ..</span><br />
இது அரசின் ஆவணங்களில் கூட உள்ளது ..<br />
<br />
<span style="color: blue;">Vanniakula Kshatriya ( including Vanniyar, Vanniya, Vannia Gounder, Gounder or Kander, Padayachi, Palli and Agnikula Kshatriya )</span><br />
<a href="http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm">http://www.tn.gov.in/bcmbcmw/bclist.htm</a></div>
Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-3042102235415476242012-01-02T03:07:00.000-08:002012-01-24T01:19:28.877-08:00சேரன் - அக்னி குல க்ஷத்ரியன் (வன்னியர் )<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; text-align: -webkit-auto;"><span style="color: red;"><b><span style="line-height: 22px;">சேரர் அக்னி குலத்தவர்</span></b></span></span><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;">. </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu7drsfGV5XEMzE15y-lFD2CoPK105Yz7k0WnKF2FDdHtJx7WovdzmPDUzZWZ3IjeIklRehd8RKEpGDP_KcEwh37GSLTWLQbJKTcHI-G3gZnkz6iLaGdIN9IvkdApyHWUy0jtB3mQRUls/s1600/cheran.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiu7drsfGV5XEMzE15y-lFD2CoPK105Yz7k0WnKF2FDdHtJx7WovdzmPDUzZWZ3IjeIklRehd8RKEpGDP_KcEwh37GSLTWLQbJKTcHI-G3gZnkz6iLaGdIN9IvkdApyHWUy0jtB3mQRUls/s1600/cheran.jpg" /></a></div><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><span style="color: blue;">அனற் புதல்வன் என்று சேரன் பேரூர் புராணத்தில்</span></span><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"> குறிப்பிடப்படுகிறான்.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;">சேர வம்சத்தின் வழி வந்த திருவனந்தபுர மன்னர்கள்</span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><span style="color: red;"> "பள்ளிமார்"</span></span><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"> என்றே அழைக்கப்படுகின்றனர்.அரசனைக் கேரளத்தில் பள்ளி என்றும் கூறுகின்றனர். </span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;">உதாரணத்திற்கு அரசனுடைய யானையை "பள்ளியுடைய யானை" என்றும் குதிரையை "பள்ளியினுடைய குதிரை" என்றும் குறிப்பிடுவர்.பள்ளி என்பது சேர அரசனைக் குறிப்பதாக அமைகிறது.</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><br />
</span><br />
<span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;">அரசன் வருகிறாரென்றால்</span><span style="background-color: white; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"><span style="color: red;"> "பள்ளி வருகிறார்"</span></span><span style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 16px; line-height: 22px; text-align: -webkit-auto;"> என்று கூறும் வழக்கமும் அங்கு இருந்தது.பள்ளி(வன்னியர்) இனத்தார் விருதுப் பெயர்களில் "சேரநாட்டுக்கு அதிபதி" , "வயநாட்டுக்கு அதிபதி" போன்றவை அடக்கம்.</span> </div>Unknownnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6123934058273351976.post-60991178046105371722012-01-02T02:58:00.001-08:002012-07-02T02:07:14.236-07:00சேரர் வரலாறு :<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="MsoNormal" style="background-color: white; line-height: 20px;">
<span style="color: blue; font-family: Latha,sans-serif; font-size: medium;"><b><br />
</b></span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;"><b>சேரர்கள்</b></span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.</span><br />
<br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப் பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">எல்லைகள் :</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz42kiU1vquWncjQgo3NrJTqHNsVu5sPgdckWAyAxpePH0uvbTrukseDH9yOtmyzCOXGOmB8bohnntDWhQ5y9FFVgInMestIGWKnVxdCmuIOx8LptSm6QJsrWap9RqlI_RExV1IQ03Y0k/s1600/1.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhz42kiU1vquWncjQgo3NrJTqHNsVu5sPgdckWAyAxpePH0uvbTrukseDH9yOtmyzCOXGOmB8bohnntDWhQ5y9FFVgInMestIGWKnVxdCmuIOx8LptSm6QJsrWap9RqlI_RExV1IQ03Y0k/s1600/1.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<span style="color: #0d0e00;"><br />
</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">மன்னர்கள் :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">நகரங்கள் :</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.</span><o:p></o:p><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCo6AEU-2qSUtEZy9LwSnm4ymkLCOSv6BLfLHqNc7G5HHJwYuG_gANw_1SYK4365I_zNzouMGvCJqOZsUi2MSJUF4lWoIKa3KCQVdxGl5GfntkPa4dJZyaWvuXdXUE-rUN6WC67UPkoY/s1600/2.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQCo6AEU-2qSUtEZy9LwSnm4ymkLCOSv6BLfLHqNc7G5HHJwYuG_gANw_1SYK4365I_zNzouMGvCJqOZsUi2MSJUF4lWoIKa3KCQVdxGl5GfntkPa4dJZyaWvuXdXUE-rUN6WC67UPkoY/s320/2.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" width="242" /></a></div>
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சில அரசர்களின் ஆட்சியாண்டுகள்[</span>1] <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஒருவாறு கணிக்கப்பெற்றுளன:</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் </span>58 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பல்யானைச் செல்கெழு குட்டுவன் </span>25 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் </span>25 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செங்குட்டுவன் </span>55 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் </span>38 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செல்வக்கடுங்கோ வாழியாதன் </span>25 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை </span>17 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><br />
* <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இளஞ்சேரல் இரும்பொறை </span>16 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள்</span><o:p></o:p><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLcadvWAf6sTBUv10E52voxcuTlQm77wzwXLrXUHfbC5z3tzyZDL-h495F77f8Us1otzfb_IjQcvbXl0lihvPzRNRxlkpEEBmFgvTh1Tovd1xyJf23hhwc1XBhYtHFbxsHzm49iKR7NNo/s1600/3.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLcadvWAf6sTBUv10E52voxcuTlQm77wzwXLrXUHfbC5z3tzyZDL-h495F77f8Us1otzfb_IjQcvbXl0lihvPzRNRxlkpEEBmFgvTh1Tovd1xyJf23hhwc1XBhYtHFbxsHzm49iKR7NNo/s320/3.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" width="278" /></a></div>
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தென்மேற்கு இந்தியாவில் உள்ள மலபார் கரைசார்ந்த நிலப்பகுதிகளையே சேரர் ஆண்டனர் (தற்போது கேரளாவில் உள்ளது).</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் :</span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<span style="color: #0d0e00;"><br />
</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் முற்காலச் சேர அரசர்களுள் ஒருவன். இவனைப் போற்றி முரஞ்சியூர் முடிநாகனார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவ்வரசன் பாரதப் போர் நிகழ்ந்ததாகக் கருத்தப்படும் கி.மு. </span>1200 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டு வாக்கில் வாழ்ந்தவர் என கருத இடமுண்டு என்று சில ஆசிரியர்கள் கருதுகின்றனர். புறநானூற்றில் கூறப்படும் ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் என வரும் பகுதியும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இறையனார் அகப்பொருள் உரையில் கூறப்படும் தலைச்சங்கப் புலவருள் முரஞ்சியூர் முடிநாகனார் என்பார் ஒருவர் என்று கூறி இருப்பதாலும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவன் முற்கால சேரர்களுள் ஒருவன் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளங்கோ அடிகள் தன் சிலப்பதிகாரத்திலும் ஓரைவர் ஈரைம்பதின்மருடனெழுந்த போரில் பெருஞ்சோறு போற்றாது தானளித்த சேரன் என கூறுகின்றார்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">உதியஞ்சேரலாதன் </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>45-70 :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">உதியஞ்சேரலாதன் கி.பி. முதல் நூற்றாண்டில் குட்டநாட்டை ஆண்ட சேர அரசன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் எல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் </span>65), <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் </span>233) <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">உள்ள </span>“<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்</span>”<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. சோழன் கரிகாலனுடன் வெண்ணிப்பறந்தலை என்னும் இடத்தில் போரிட்ட பொழுது தவறுதலாக முதுகில் புண்பட்டதால் நாணி வடக்கிருந்து உயிர்துறந்ததாகக் கூறுவர். இச்செய்தியை சங்ககாலப் புலவர்கள் மாமூலர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வெண்னிகுயத்தியார்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கழாத்தலையார் ஆகியோர் கூறுகின்றனர்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>71-129 :<o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். இவன் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனின் மகன். இவனது தாய் வெளியத்து வேண்மாளான நல்லினி. இவனுக்குப் பின் சேரநாட்டை ஆண்ட செல்கெழு குட்டுவன் இவனது தம்பி. இமயம் வரை படை நடத்திச் சென்றவன் என்னும் பொருளில் இவன் </span>“<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இமய வரம்பன்</span>” <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">எனக் குறிப்பிடப்பட்டுள்ளான். சங்காகாலத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்து என்னும் தொகுப்பு நூலில் அடங்கும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குமட்டூர்க் கண்ணனார் என்பவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் இம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டவை. இவரைவிட காழா அத் தலையார்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">மாமூலனார்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பரணர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.</span><o:p></o:p><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrvduO33jpybSMwGCJOEVWapye96StpMgSWJE_5KD4KkBI6nkx4EvSi92v5ju1GxfIegEmUBI_88bQcSgBEWGnfyHei55-4zNabbTcoNrajZuoFTlm-3mpmwZ0DSO_BYDHZh0oue-leKA/s1600/5.png" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrvduO33jpybSMwGCJOEVWapye96StpMgSWJE_5KD4KkBI6nkx4EvSi92v5ju1GxfIegEmUBI_88bQcSgBEWGnfyHei55-4zNabbTcoNrajZuoFTlm-3mpmwZ0DSO_BYDHZh0oue-leKA/s1600/5.png" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKMnq71cQDmbPVu9DnDTfnrtbVN6DRIuTj2MEsOqanoi9Z8wC967kfvxH9_UlwRkWw5wiIrAUibW0verr_xQOn7gOYBXzbP-nYqyjf-H7AojIBpkxaZbnvydoQOkgGJOQPPiqKENTh0c/s1600/6.png" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpKMnq71cQDmbPVu9DnDTfnrtbVN6DRIuTj2MEsOqanoi9Z8wC967kfvxH9_UlwRkWw5wiIrAUibW0verr_xQOn7gOYBXzbP-nYqyjf-H7AojIBpkxaZbnvydoQOkgGJOQPPiqKENTh0c/s1600/6.png" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வட இந்தியாவில்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நந்த மரபினருடைய வலிமை குன்றி மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்தது. இக் காலத்திலேயே இமயவரம்பன் சேர நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. இவன் படை நடத்திச் சென்று இமயம் வரையிலும் உள்ள பல அரசர்களை வென்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. வடக்கில் உள்ள இமயத்தையும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தெற்கின் குமரிக்கும் இடைப்பட்டிருக்கும் பரந்த நாட்டில் உள்ள</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செருக்குக் கொண்டிருந்த மன்னர்களது எண்ணங்களைப் பொய்யாக்கி அவர்களைத் தோற்கடித்துச் சிறைப்பிடித்தவன் என்னும் பொருளில் இவனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . எனினும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்றாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்தருக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள்.</span><br />
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">முதுமைப் பகுவத்திலும் போர்க்குணம் கொண்டு விளங்கிய நெடுஞ்சேரலாதன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வேற்பஃறடத்துப் பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னனோடு ஏற்பட்ட போரில் காயமுற்றான். அவ் வேளையிலும் தன்னைப் பாடிய கழா அத் தலையார் என்னும் புலவருக்குத் தன் கழுத்திலிருந்த மாலையைப் பரிசாக அளித்தான் என்று சொல்லப்படுகிறது. போரில் தனக்கு முதுகில் ஏற்பட்ட புண்ணினால் வெட்கமடைந்து வடக்கிருந்து இவன் மாண்டான் எனப் புறநாநூறு கூறுகிறது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பல்யானைச் செல்கெழுகுட்டுவன் </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>80-105 :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பல்யானைச் செல்கெழுகுட்டுவன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரநாட்டை ஆண்ட ஒரு மன்னன் ஆவான். இவனது தமையனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சோழ மன்னனுடனான போரில் இறந்த பின்னர் இவன் அரசனானான். சங்க கால இலக்கியமான பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. இது தவிர வேறு சங்கப் பாடல்கள் எதிலும் இவனது பெயர் காணப்படவில்லை. </span>25 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த இவன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நெடும் பாரதாயினார் என்னும் தனது குருவுடன் காட்டுக்குத் தவம் செய்யச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவனது ஆட்சிக் காலத்தில் பல போர்களில் ஈடுபட்டுச் சேர நாட்டின் ஆதிக்கத்தைப் பரப்பியதாகத் தெரிகிறது. </span>500 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சிற்றூர்களை அடக்கிய உம்பற்காடு எனப்படும் பகுதியைச் சேரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பூழி நாட்டின்மீது படையெடுத்து அதனை வெற்றிகொண்டான்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தான் என்பது போன்ற தகவல்கள் பதிற்றுப்பத்தில் காணப்படுகின்றன.</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhh3bE122utx-2GiLp9T96WpSgRYyqdpKAtrUYOtNTM3SDFUZ3Ono_Ik8nem2AknAPmU5FK7CleWmU2dkkxUrD4djfh4pWuWgwEExUbRm3CrPEFnKxNWB8GFM6gi2rlZl-MCc3SfEfl6o/s1600/7.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhh3bE122utx-2GiLp9T96WpSgRYyqdpKAtrUYOtNTM3SDFUZ3Ono_Ik8nem2AknAPmU5FK7CleWmU2dkkxUrD4djfh4pWuWgwEExUbRm3CrPEFnKxNWB8GFM6gi2rlZl-MCc3SfEfl6o/s1600/7.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>106-130 :</span><br />
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பண்டைத் தமிழகத்தின் முப்பெரும் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைக் குறித்துப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர். இப் பதிகத்துள் இவன்</span>….<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்ற மகன்</span>….<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">காலம் :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பிற சங்ககால மன்னர்களைப் போலவே இவனது காலமும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் இவனைப் பாடிய கல்லாடனார் என்னும் புலவர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தலையானங்காலத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பற்றியும் பாடியுள்ளார். இதனால் இப் பாண்டிய மன்னனும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நார்முடிச் சேரலும் ஏறத்தாழ ஒரே காலத்தவர் எனக் கருதப்படுகின்றது. இவன்</span>25 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள் வரை ஆட்சி செய்ததாகக் கருதப்படுகிறது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">செயல்கள் :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பூழி நாட்டுக்குப் படை எடுத்துச் சென்றது</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நன்னன் என்னும் மன்னனைத் தோற்கடித்தது போன்றவற்றை இவனது பெருமைகளாகச் சங்கப்பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார்</span>, “……<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்</span>…..”<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரன் செங்குட்டுவன் </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>129-184 :</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1udwTEq00lALvlfEFowEOOL6TFGeqQS3GNDGWOtCo1pqNHIY0LvJ5ly5Ytn2Yz-M8yGGhVT8zrf6QD0chUzUG_CMkp8aBiAjLIXiuSXdd_OiGOXEbKPqNvisEUPpu_j4SKmt1Nwte1Rk/s1600/8.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh1udwTEq00lALvlfEFowEOOL6TFGeqQS3GNDGWOtCo1pqNHIY0LvJ5ly5Ytn2Yz-M8yGGhVT8zrf6QD0chUzUG_CMkp8aBiAjLIXiuSXdd_OiGOXEbKPqNvisEUPpu_j4SKmt1Nwte1Rk/s1600/8.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரன் செங்குட்டுவன் பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஞாயிற்றுச் சோழன் என்னும் சோழ மன்னனுடைய மகள் நற்சோணைக்கும் பிறந்தவன். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.</span><br />
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">காலம்</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9mB0o1FbWFOFF7Rs7Kj9o7xj5vcZs8z9j2Ka2ginw_DWu9O9ZNugxdiN2sxIXu5AJk4lQJImtGtDV5WxQx0v_9SSjJq-XuN0gJxL0c2oWGbfiZOvmyRdHV6gKd7GMwopyRNVpPxzihKs/s1600/9.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9mB0o1FbWFOFF7Rs7Kj9o7xj5vcZs8z9j2Ka2ginw_DWu9O9ZNugxdiN2sxIXu5AJk4lQJImtGtDV5WxQx0v_9SSjJq-XuN0gJxL0c2oWGbfiZOvmyRdHV6gKd7GMwopyRNVpPxzihKs/s1600/9.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<span style="color: #0d0e00;"><br />
</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பல்வேறு சேர மன்னர்களைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் குறிப்புக்கள் இருந்தாலும் செங்குட்டுவன் பற்றிய தகவல்கள் சங்க நூல்கள் எதிலும் காணப்படாமையால் இவன் சங்க காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது வெளிப்படை. இவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் முதலாம் கயவாகு மன்னன் சேரநாட்டுக்கு வந்ததாகவும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளதால் செங்குட்டுவன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது துணிபு. முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து தெரிய வருவதால்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செங்குட்டுவனும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று கூற முடியும். சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் செங்குட்டுவனுக்குச் சம காலத்தில் வாழ்ந்தவனே.</span><o:p></o:p><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">வரலாற்றுத் தகவல்கள் :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தமிழ் இலக்கியங்களில்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சிலப்பதிகாரம் அதன் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்களைத் தருகிறது. தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்ட சேரன் செங்குட்டுவன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான். அதற்காகப் பொதிய மலையில் கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்குச் சான்றாகது என்று எண்ணிய அவன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஒரு சமயம் தமிழ் மன்னர்களை எள்ளி நகையாடிய வடநாட்டு வேந்தரான கனக விசயரை வென்று</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இமயமலையில் கல்லெடுத்து</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமப்பித்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேர நாட்டுக்குக் கொண்டுவந்து சிலை எடுக்க அவன் முடிவு செய்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. இதன்படியே வட நாட்டுக்குப் படை நடத்திச் சென்று</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">எண்ணியபடியே கனக விசயர் தலையில் கல் சுமப்பித்துக் கண்ணகிக்குச் சிலை எடுத்ததாகவும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டுச் சினம் தணிந்து கனக விசயரைச் சிறையினின்றும் விடுவித்து</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அறச் செயல்களில் ஈடுபடச் செங்குட்டுவன் முடிவு செய்தான் என்பதும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் கனக விசயர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இலங்கை மன்னன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">மாழுவ மன்னன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8gjqwbk1TUzMCvFxG2yIRetv0pzikUcpThkQyxJ8wqKKsd6WwyyFGKP7h-Owt02jhZ6YF7xJiY9-acwQqv0dRR11dt2xa2_972wl6KsY-os6HUHAJOsZ2T2z_jzbM_Wxk0gdB4sKLlMU/s1600/10.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8gjqwbk1TUzMCvFxG2yIRetv0pzikUcpThkQyxJ8wqKKsd6WwyyFGKP7h-Owt02jhZ6YF7xJiY9-acwQqv0dRR11dt2xa2_972wl6KsY-os6HUHAJOsZ2T2z_jzbM_Wxk0gdB4sKLlMU/s1600/10.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<br /></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">அந்துவஞ்சேரல் இரும்பொறை :</span><br />
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவனது புதல்வர்களுக்கு</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அந்துவஞ்சேரல்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கொங்கு நாடு</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.இவனது இரண்டாவது மகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை சேர மன்னன் ஆனான். இவனுக்கு முன் குறுகிய காலம் அந்துவஞ்சேரலாதன் அரசனாக இருந்திருக்கக்கூடும் என்பது சிலரது கருத்து. ஆனால் இதற்குப் பல காலம் முன்னரே</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் ஆட்சிக்கு வருவதற்கு முன் அந்துவஞ்சேரல் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.</span><o:p></o:p></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>123-148 :<o:p></o:p><br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLuLjANXaKSyk3PmVhNl-HLi3K6NezdVejONij0H_VK8oRfbC-GicylxQ3q94bD82H8Rr1xM3TC4jkRTvFTAvfaDobhro2ZDyntJJfzyMPKageaYAToH9nSD1tnkAI8OHnwOe5riKXPI/s1600/11.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxLuLjANXaKSyk3PmVhNl-HLi3K6NezdVejONij0H_VK8oRfbC-GicylxQ3q94bD82H8Rr1xM3TC4jkRTvFTAvfaDobhro2ZDyntJJfzyMPKageaYAToH9nSD1tnkAI8OHnwOe5riKXPI/s1600/11.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
</div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன். சேரர்களில் இரும்பொறை மரபைச் சேர்ந்த இவன் அத்துவஞ்சேரல் இரும்பொறைக்கும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரன் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வாழியாதன் இரும்பொறை அரசனானான். சங்கத் தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார். இவன் திராவிடக் கடவுளான மாயோனை வணங்கி வந்தான்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவனுடைய காலத்தில் தமிழகத்தில் பௌத்தம் பரவத் தொடங்கியிருந்தது. இக்காலத்தில் புத்த துறவிகளுக்குப் படுக்கைகள் செய்து கொடுப்பது அறமாகக் கருதப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட படுக்கைகளுக்கு அருகே இக் கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டுக்களும் வெட்டப்பட்டன. கரூருக்கு அண்மையில் புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு என அறியப்படும் இத்தகையதொரு கல்வெட்டு </span>“<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கோ ஆதன்</span>” <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">என்பவன் பற்றிக் குறிப்பிடுகிறது. இது வாழியாதன் இரும்பொறையே எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர்.</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifQ8qtL5FH44FQDfCJ7z3gVer5WRGu4zZZdasR-9UkzJ0CDN861LZY-ih1wmpuhTmQKT3dgbpsDMbDxB44KLTIVDICFQR1oDOWidTRVzMaD8Tu94fkHuIIz5Miwym5G0T7O2mwAXb3xks/s1600/12.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifQ8qtL5FH44FQDfCJ7z3gVer5WRGu4zZZdasR-9UkzJ0CDN861LZY-ih1wmpuhTmQKT3dgbpsDMbDxB44KLTIVDICFQR1oDOWidTRVzMaD8Tu94fkHuIIz5Miwym5G0T7O2mwAXb3xks/s1600/12.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் புலவர் இப் பதிகத்தைப் பாடியுள்ளார். குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற பெயரில் அரியணை ஏறுமுன்</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆடல்கலையில் வல்லவனாகி ஆட்டனத்தி என்னும் பெயரைக் கொண்டிருந்தான். கலையார்வம் கொண்டு விளங்கிய இவன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அன்பு</span>,<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அறம்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக நல்லாட்சி நடத்தி வந்தான். இவன் இவன் </span>35 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>148-165 :<br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர வேந்தர்களின் மரபில் வந்தவன் இவன். இவனது தந்தையான செல்வக் கடுங்கோ ஆழியாதன் இரும்பொறைக்குப் பின் சேர நாட்டின் அரசன் ஆனான். இவன் ஆழியாதனுக்கும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன். சங்கத் தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவன்மீது பாடப்பட்டது. அரிசில்கிழார் என்னும் புலவர் இதனைப் பாடியுள்ளார்.</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv0AEjT-k_r-MxTshSv_GRMFZUaTmGzIYQTb0SAbvumWIhQtz3_QEXqhu6F-qKmzDpd71Q0DRVLTefhUBM19qQP9op62pQWnJXo-W4DYt4iEHjVWI48Nle2OGYnPNjTSC23CaQulIQJZg/s1600/13.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhv0AEjT-k_r-MxTshSv_GRMFZUaTmGzIYQTb0SAbvumWIhQtz3_QEXqhu6F-qKmzDpd71Q0DRVLTefhUBM19qQP9op62pQWnJXo-W4DYt4iEHjVWI48Nle2OGYnPNjTSC23CaQulIQJZg/s1600/13.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானை வென்றதன் மூலம் இவனுக்குத் தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் வழங்கியது. இதனையொட்டியே தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுந்தது. களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறித் துயில் கொண்டு விட்ட மோசிகீரனார் என்னும் புலவர் துயில் கலையும் வரை கவரி வீசினான் இவன் என்று புகழப்படுகிறான்.கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இளஞ்சேரல் இரும்பொறை </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>165-180 :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இளஞ்சேரல் இரும்பொறை</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">பண்டைத் தமிழகத்தின் சேர நாட்டை ஆண்டவன். இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். இவனுக்குப் பாண்டியர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சோழர்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குறுநில மன்னர்கள் எனப் பல முனைகளிலுமிருந்து எதிர்ப்புக்கள் இருந்தன எனினும் அவற்றைச் சமாளித்து </span>16 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் இவனாவான். பெருங்குன்றூர் கிழார் என்பவர் இதனைப் பாடியுள்ளார்.இவன் கோப்பெருஞ் சோழனின் தலைநகரான உறையூரைத் தாக்கிக் கைப்பற்றினான் அங்கு கிடைத்த பொருளையெல்லாம் வஞ்சிமாநகர் மக்களுக்குக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எனினும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவன் உறையூரைத் தாக்கியமை சேரர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது எனலாம். கோப்பெருஞ் சோழனின் மைந்தர்கள் இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கக் காத்திருந்தனர்.</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0P6-jtoZxD-qdpG2r3wlMXBZUp5dgS1Xk3zmzacqEyb4UPl4wW32PAcjqEST7OxL5-sJYX6RXE-_9twjhE3hOm_Cl8HkYHZM_AjNJvGzepm1kJX2BYXgXUjfnNO9gToAa1TOX5dLv5Tk/s1600/14.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0P6-jtoZxD-qdpG2r3wlMXBZUp5dgS1Xk3zmzacqEyb4UPl4wW32PAcjqEST7OxL5-sJYX6RXE-_9twjhE3hOm_Cl8HkYHZM_AjNJvGzepm1kJX2BYXgXUjfnNO9gToAa1TOX5dLv5Tk/s1600/14.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: red;"><span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குட்டுவன் கோதை </span>– <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">கி.பி. </span>184-194 :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">குட்டுவன் கோதை பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒரு அரசன். இவன் சேர நாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டை ஆண்டவன். இவனைக் குறித்த தகவல்கள் சங்கத் தமிழ் இலக்கியமான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் </span>54 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்பாரும் உளர்.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">சேரமான் வஞ்சன் :</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVrNDBMGbQTdUvfJqcbiFiNUf_wHzfsXp5hgcuFMbJ_gShBTGpp5-NNgVdu0pVP95_EPmP-FXL0xeHI6cjS9gNQ2VoYaixPucZ8Pwc-Wz5jBHaohDsadLoCX_AvhgCKusRcnJVrSolKK0/s1600/15.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiVrNDBMGbQTdUvfJqcbiFiNUf_wHzfsXp5hgcuFMbJ_gShBTGpp5-NNgVdu0pVP95_EPmP-FXL0xeHI6cjS9gNQ2VoYaixPucZ8Pwc-Wz5jBHaohDsadLoCX_AvhgCKusRcnJVrSolKK0/s1600/15.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரமான் வஞ்சன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">என்பவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேரர் மரபைச் சேர்ந்தவர். பாயல் என்னும் மலைப் பகுதியை ஆண்ட சிற்றரசன். திருத்தாமனார் என்பவர் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் மூலமே இவன் பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. வஞ்சன் என்னும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனத் தெரிகிறது. இவனது இயற்பெயர் தெரியவரவில்லை.ன் புறநானூற்றுப் பாடலின் மூலம் இவ்வரசன்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">புலவர்களை இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு வேண்டியன அளித்துப் பேணும் பண்பு கொண்டவன் எனத் தெரிகிறது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">மருதம் பாடிய இளங்கடுங்கோ :</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார். இவரும்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இளஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுபவர்களும் உளர். எனினும் இதற்கான போதிய சான்றுகள் கிடைத்தில.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">சேரமான் கணைக்கால் இரும்பொறை :</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEwDqwWe_cwVkF4S0Dmb1ZCfohd2WDtDjiNGRF3dV0tEXuFgAMpVrZDy4EOrZr7WpmKKcW-4f8IHZQx9EWKf0d4UOSBTO9fgIhsvSx8ac9xoNeoR5TeV0EOA6n2Ycjv7kGl5lWYm0Lr1g/s1600/16.jpg" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEwDqwWe_cwVkF4S0Dmb1ZCfohd2WDtDjiNGRF3dV0tEXuFgAMpVrZDy4EOrZr7WpmKKcW-4f8IHZQx9EWKf0d4UOSBTO9fgIhsvSx8ac9xoNeoR5TeV0EOA6n2Ycjv7kGl5lWYm0Lr1g/s1600/16.jpg" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவன். இவன் சோழன் செங்கணான் என்பவனோடு போரிட்டு அவனால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்தவன். சிறையில் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டபோது காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அதனைக் குடியாது ஒரு செய்யுளைப் பாடிவிட்டு வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைக்கு இரங்கிப் பாடிய இச் செய்யுள் புறநானூற்றின் </span>74 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆவது பாடலாக உள்ளது.</span><br />
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;"><br />
</span><br />
<span lang="TA" style="color: red; font-family: Latha,sans-serif;">சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை :</span><o:p></o:p></div>
<div class="separator" style="background-color: white; clear: both; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgciiTvJrhg70XHZ7IMqiSXYlyceaSI282xYF4Obbjw13fzwY-QurjFbCGrtvXdI4G03XKLvHz6C5LsogD8z1STbKS8Rh1aU4ZvubEcEa2muD4DonLYgU9-xpY5VsTqxhlAawVbvMlfSF0/s1600/17.png" imageanchor="1" style="color: #6699cc; margin-left: 1em; margin-right: 1em; text-decoration: none;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgciiTvJrhg70XHZ7IMqiSXYlyceaSI282xYF4Obbjw13fzwY-QurjFbCGrtvXdI4G03XKLvHz6C5LsogD8z1STbKS8Rh1aU4ZvubEcEa2muD4DonLYgU9-xpY5VsTqxhlAawVbvMlfSF0/s1600/17.png" style="border-bottom-style: none; border-color: initial; border-image: initial; border-left-style: none; border-right-style: none; border-top-style: none; border-width: initial; position: relative;" /></a></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span style="color: #0d0e00;"><br />
</span></div>
<div class="MsoNormal" style="background-color: white; color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 20px;">
<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">இவன் பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த ஒருவன்.</span>“<span lang="TA" style="font-family: Latha,sans-serif;">மாக்கோதை</span>” <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">என்பது இவன் ஒரு இளவரசன் என்பதைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இவனைப் பற்றிய தகவல்கள்</span>, <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">சங்க இலக்கியம் மூலமே கிடைக்கிறது. இவனது மனைவி இறந்தபோது இவன் பாடியதாகக் கூறப்படும் பாடல் ஒன்று புறநானூற்றில் </span>245 <span lang="TA" style="font-family: Latha,sans-serif;">ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது</span></div>
</div>Unknownnoreply@blogger.com